காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பும் சக்தி மோடிக்கு மட்டுமே உண்டு

 அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த காங்கிரஸ கட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமானால் அது பாஜக கூட்டணியினால் மட்டுமே முடியும். நாடுமுழுவதும் மக்களின் பேராதரவை பெற்ற மோடியால் மட்டுமே முடியும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னை வண்டலூரில் சனிக்கிழமை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் இல. கணேசன் மேலும் பேசியதாவது : மோடி பங்கேற்றுள்ள இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் சில தலைவர்களை பங்கேற்க முயற்சித்தோம். கூட்டணி முடிவாகாததால் அது நடக்காமல் போய் விட்டது.

இன்று இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், ம.தி.மு.க இணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஆர்.ஈஸ்வரன் மற்றும் புதிய நீதிக்கட்சியின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் ஒரு அரசியல் கட்சியுடன் பேச்சவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் அந்தக்கட்சி பாஜக கூட்டணியில் இணையும். வரும் மக்களவைத் தேர்தல் வெறும்தேர்தல் மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகளை எடை போடுவதற்கான கருத்துக்கணிப்பாகும்.

அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்த காங்கிரûஸ வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அது பாஜக கூட்டணியால் மட்டுமே முடியும். நாடுமுழுவதும் மக்களின் பேராதரவை பெற்ற மோடியால் மட்டுமே முடியும். எனவே 3}வது அணிக்கு ஆதரவளித்து வாக்குகளை வீணாக்காமல் மோடியைபிரதமராக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று இல.கணேசன் தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...