நடிகர் ரஜினி காந்த் போன்ற நடுநிலையாளர்கள் அனைவரும் தே.ஜ.,கூட்டணிக்கு ஆதரவுதெரிவிக்க வேண்டும்

 நடிகர் ரஜினி காந்த் போன்ற நடுநிலையாளர்கள் அனைவரும் தே.ஜ.,கூட்டணிக்கு ஆதரவுதெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க தேசியச்செயலாளர் தமிழிசை சவுந்தர் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் நிருபர்களுக்கு புதன் கிழமை அவர் அளித்த பேட்டி:

நாடாளுமன்றத் தேர்தலில், ஊழலுக்கு எதிராகவும் வளர்ச்சியை மையப் படுத்தியும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. பா.ஜ.க தவிர வேறு எந்தக்கட்சியும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. அவற்றுக்கு அந்தத்தகுதியும் இல்லை. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்யும் போது, "தவறுசெய்திருந்தால் தலையில் குட்டுங்கள். சிவகங்கையிலேயே தங்கியிருந்து மக்கள்பணியாற்ற விரும்புகிறேன்" என்று சொல்லி வருகிறார். இனிமேல் டெல்லியில் அவருக்கு வேலை இருக்காது.

தமிழகத்தில் பலதிட்டங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை. அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருந்துவமனையில் மருந்துகள் கிடைக்காதநிலை உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்கிறார் ஜெயலலிதா.

நதிகளை இணைத்தால்தான் மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். முந்தைய பாஜக ஆட்சியில், நதிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிட்டதும் அதற்கு நிதி உதவி அளித்து முழு ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். 1996-ம் ஆண்டு தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலில், அப்போதைய ஆட்சி அகற்றப்படாவிட்டால் மக்களை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் குரல் கொடுத்தார். அதுபோல, இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றா விட்டால், நாட்டுமக்களை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று அவர் குரல்கொடுக்க வேண்டும்.

ரஜினியை போன்ற நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள், நடு நிலையாளர்கள், நதிகள் இணைப்பு உள்ளிட்ட நல்ல திட்டங்கள் வரவேண்டும், நாடு காப்பாற்றப்படவேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் பாஜக கூட்டணியை ஆதரிக்கவேண்டும். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இன்னும் 2 வாரத்தில் தமிழகத்துக்கு வருவார் என்று தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...