அமெரிக்காவின் கருத்து அவசியமா?

 எனது அமெரிக்க விஜயத்தின் ஒரு பகுதியாக சில வெள்ளைக்கார அமெரிக்கர்களை சந்தித்து இந்தியாவில் மோடி தலைமையிலான புதிய அரசு பற்றி அவர்களுடைய கருத்துக்களை கேட்க முடிவு செய்திருந்தேன்..

அதற்காக ஒரு செனட்டர் ( எம்.பி.)ஒரு பத்திரிக்கையாளர், ஒரு பிசினஸ்மேன்,ஒரு பணியாளர், ஒரு இல்லத்தரசி, ஆகியோரை தெரிவு செய்து அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன்..

என் மகன் தேஜஸ்..பட்டமேற்படிப்பு படிப்பவர்–அவருடன் நான் பல்வேறு விஷயங்களை விவாதிப்பதுண்டு..அவருடைய கருத்துக்கள் பலமுறை என் சிந்தனையை தூண்டியதுண்டு..

தமிழகத்தின் லேட்டஸ்ட் அரசியல் பற்றி பேச்சு வந்தது..

"டெல்லி மேல்சபையில் நமக்கு மெஜாரிட்டி இல்லை..எதிர்காலத்தில் நமக்கு "ஜெ"யின் ஆதரவு தேவை..காங்கிரசுக்கு அடுத்தபடி எஸ்பி/பிஎஸ்பி தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்..நமக்கு நேசக்கரம் நீட்டும் தூரத்தில் 'ஜெ' மட்டுமெ இருக்கிறார்."–என்றெல்லாம் விளைக்கி வந்தவர் –என்னுடைய அமெரிக்க "மோவ்" பற்றி தெரியாமலே அவர்– சொன்ன விஷயத்தின் சாரம் இதோ..

"அமெரிக்காவிற்கு இந்தியாவின் மீது உள்ள ஆர்வம் "வியாபாரம் " மட்டுமே..இதே நோக்கில்தான் உலகநாடுகள் பலவற்றை அது கபளீகரம் செய்துள்ளது..இது கைகூடாமல் போகும் போதெல்லாம், அது "மனித உரிமையை" கைய்யிலெடுக்கும்.

குஜராத்தில் மனித உரிமை மீறல் என மோடியை சொல்ல அமெரிக்காவிற்கு என்ன தகுதி இருக்கிறது? முஸ்லீம்கள் மீது அமெரிக்காவீற்கு உண்மையான அக்கரை இருக்குமானால், ஆஃப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், பாலஸ்தீனிலும், முஸ்லீம்களை கொன்று குவித்தது ஏன்?

உலக மனித உரிமை மீரலின் ஒட்டுமொத்த காண்ட்ராக்ட் அமெரிக்காவிடமே இருக்கிறது..அணு ஆயுத ஒப்பந்தத்தில் இந்தியா தனது உரிமைகளை விட்டுக்கொடுத்து "பெரும் வியாபார லாபம்"–பெற்றுத்தந்ததால், மன்மோகன் சிங் அரசை அமெரிக்கா புகழ்ந்து வந்தது..

இந்த விஷயங்கள் மோடியிடம் பலிக்காது என்பது அமெரிக்காவுக்கு தெரியும்..விளைவு விசாவே கேட்காத மோடிக்கு விசா மறுத்ததாக விளம்பரம் செய்தது..தேர்தல் வெற்றிக்கு பின் இன்று மோடி பின்னாலே ஓடிவருகிறது..

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலகமும், தொடர்ந்து புது அரசை புகழ்ந்து வருகிரது..மோடியின் "திடமே" அமெரிக்காவின் "திமிருக்கு" பதில் சொல்லியுள்ளது..,

அமெரிக்காவின் கருத்துக்கள்–புகழ்ச்சிகள், நமக்கு தேவை இல்லை..
இது புரியாத சில "அமெரிக்க அடிவருடிகள்"-போல நீங்களும், "அமெரிக்கவின் கருத்து"–என எதுவும் எழுதிவிடாதீர்கள்..என்றார்..

இதற்கிடையே சம்பந்த பட்ட அமெரிக்கர்களை நான் சந்தித்தேன்..மோடி அரசு பற்றி எந்த கேள்வியும் கேட்க வில்லை..அவர்களே நம்மை புகழ்ந்தார்கள்..

நம்மை நாம் மதித்தால் மற்றவர்கள் மதிப்பு நமக்கு தேவையே இல்லை..

உலகின் குருவாக ஆகப்போகும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நாம்..

நம்முன் அமெரிக்கா ஜுஜுபியா?–சுண்டெலியா?–பெரியவன்  இல்லை..இல்லையா?

எதுவென நீங்களே தீர்மானியுங்கள்.

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...