இந்தியாவின் எல்லா மொழிகளுமே தேசிய மொழிகள்தான்

 தமிழ்புத்தாண்டு தொடங்கும் முதல்வாரத்தை ‘தமிழ் வாரமாக’அறிவித்து நாடுமுழுவதும் கொண்டாட வேண்டும் என மத்திய அரசை பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளை யொட்டி மதுரை கே.கே.நகரிலுள்ள அவரது சிலைக்கு இல.கணேசன் திங்கள்கிழமை மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
தமிழகத்தில் மட்டும் தான் சினிமா கொட்டகைபோல கோயில்களில் பக்தர்களிடம் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன.

கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளின் வருமானத்தை வசூலித்தாலே, பக்தர்களுக்கு இலவசதரிசனம் மட்டுமல்ல அன்னதானமே வழங்கமுடியும். ஆனால் அந்த வருமானத்தை வசூலிப்பதில் அரசு திறமையைக் காட்டாமல் பக்தர்களிடம் பணம்வசூலித்து, ஏற்றத்தாழ்வு காட்டுவது பொருத்தமல்ல.

பிரதமர் ஆவதற்கு முன்பே நரேந்திரமோடிக்கு இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் நன்குதெரியும். சுஷ்மாஸ்வராஜ் அதை விட அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறார். நாங்களும் சொல்லி இருக்கிறோம். புதிய ஆட்சி வந்த பிறகு இலங்கை மீதான அணுகுமுறை, இலங்கை அரசுக்கு இந்தியா மீதுள்ள அணுகுமுறையில் லேசானமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனாலேயே எல்லாம் முடிந்துவிட்டதாகக் கருதமுடியாது. பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அரசு மத்தியில் இருக்கிறது. இந்திய மீனவர்கள்மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. விரைவில் சுமுகத்தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இந்தியாவின் எல்லா மொழிகளுமே தேசிய மொழிகள்தான். சமஸ்கிருத வாரவிழா கொண்டாடுவதில் தவறில்லை. அதேசமயம் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டையும் சமமாகப்பாவித்து நான் ஏற்கெனவே ஒரு வேண்டுகோளை மத்திய அரசுக்கு விடுத்துள்ளேன். ஏப்.14ம் தேதி தொடங்கி ஒருவாரம் அதாவது தமிழ் புத்தாண்டு தொடங்கும் முதல்வாரத்தை தமிழ் வாரமாக அறிவித்து, நாடுமுழுவதும் விழா எடுக்கவேண்டும். தொடர்ந்து இதை வலியுறுத்துவேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அவசியமானது. அதேசமயம் மழைக்காலங்களில் பெருகிவரும் வெள்ளம் வீணாக கடலில்கலக்காமல் இருக்க, பல இடங்களில் தடுப்பணைகளை கட்டவேண்டும். நிரந்தர ஏற்பாடான நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுவிட்டால் 365 நாளும் காவிரியில் தண்ணீர் ஓடும். இவ்வாறு இல. கணேசன் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...