நடந்த சம்பவத் துக்காக மிகவும் வருந்துகிறேன்

 தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி குறித்து தனது நாட்டு ராணுவ இணையதளத்தில் அவதூறாக கட்டுரை வெளியிடப்பட்டதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று வருத்தம் தெரிவித்தார்.

இலங்கை ராணுவத்தின் இணைய தளத்தில் சில தினங்களுக்கு முன், இலங்கை மீனவர்கள், கச்சத் தீவு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவதை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிடப்பட்டது.

இதன் அருகே காதல் சின்னமும் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் கடும் ஏற்ப்பட்டது . இதைத் தொடர்ந்து, தனது இணையதளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கட்டுரை, படத்தை இலங்கை ராணுவம் நீக்கியது, மேலும், நிபந்தனையற்ற மன்னிப்பும்கேட்டது. இருப்பினும், இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டிக்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டது.

இந்நிலையில், இந்தியாவுக்கான இலங்கைதூதரான சுதர்சன் சினவர்த் தனேவை வெளியுறவு அமைச்சகம் நேற்றுமுன்தினம் நேரில் அழைத்து, கண்டனம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, தனது நாட்டு ராணுவத்தின் செயலுக்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவும் நேற்று வருத்தம் தெரிவித்தார். ”நடந்த சம்பவத் துக்காக மிகவும் வருந்துகிறேன். இச்சம்பவம் பற்றி அறிக்கை அளிக்கும் படி ராணுவத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...