பாஜக.,வில் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப் படவில்லை

 பாஜக.,வில் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப் படவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்யநாயுடு கூறினார்.

கோவையில் நிருபர்களிடம் அவர் ஞாயிற்றுக் கிழமை கூறியது:

பாஜக ஆட்சிமன்ற குழுவில் இருந்த மூத்த தலைவர்கள் வாஜ்பாய், எல்கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் மாற்றப்பட்டு புதியநிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்தமாற்றம் அவர்களை புறக்கணிப்பதாகாது .

இளம் தலைமுறைக்கு வாய்ப்புக்கொடுக்கும் வகையிலே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிகழ்வை அடுத்த தலை முறையினருக்கான வாய்ப்பு என்றே பார்க்கவேண்டும்.

நான், பிரதமர் மோடி உள்ளிட்டவர்களை வாஜ்பாய், அத்வானி ஆகிய மூத்த தலைவர்களே அடையாளம் கண்டு ஊக்குவித்தார்கள். நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மத்திய அரசு தீர்மானிப் பதில்லை. அது, மக்களவை தலைவர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தவிவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் தற்போது எந்தக்கருத்தும் சொல்ல முடியாது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு தாற்காலிகமானது தான். விலைவாசி உயர்வுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் காரணம். பாஜக ஆட்சிக்குவந்து 3 மாதங்களே ஆன நிலையில், விலைவாசி உயர்வுக்கு பொறுப்பேற்க முடியாது .

கல்வி, சுகாதாரம் என்பது சமூகத்தின் இருகண்களைக் போன்றது. சமூகம் வளரவேண்டுமானால் முழுமையான கல்வி அறிவுபெற்றிருக்க வேண்டும். நாட்டில் 40 சதவீதம் மக்கள் இன்றளவும் எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருக்கின்றனர். இனியும் இந்நிலை தொடரக்கூடாது. மக்களிடம் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கு சரியான தருணம் இது தான். அதற்கேற்ப பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கல்வி, சுகாதாரத்தை பொறுத்த வரை அரசின் பங்களிப்பு மட்டும் முழுபலனை கொடுத்துவிடாது. தனியார் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே வளர்ச்சியை எட்டமுடியும். எல்லாவற்றையும் அரசு செய்துகொடுத்து விடும் என்ற நம்பிக்கையில் மக்கள் அப்படியே இருந்துவிட கூடாது. நாமும் நமது கடமைகளில் இருந்து தவறக்கூடாது. சமுதாய பங்களிப்பை அளிக்கவேண்டும். அறிவுத் திறன் மிக்கவர்களின் பங்களிப்பு இப்போது நாட்டிற்கு அவசியமாக இருக்கிறது. நாட்டின் சுகாதாரத்திற்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இயந்திர மயமாக்கல் மூலம் உடல் உழைப்பு குறைந்துவிட்டதால் நோய் தாக்கி வருகிறது. ஒவ்வொருவரும் சுகாதாரத்தில் அக்கறை செலுத்தவேண்டியது அவசியம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...