ஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்குடன் புதியதிட்டங்கள்

 ஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்குடன் புதியதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்துள்ளார் .

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில ஜவுளித்துறை அமைச்சர்களின் வருடாந்திர மாநாட்டுக்கு தலைமைவகித்து அவர் பேசியதாவது: ஜவுளித் துறையை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஜவுளிவளங்களைக் கண்டறிந்து அதன் தயாரிப்பு, ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்.

பிரதமரின் "அனைவரின் வளர்ச்சியும் அவரவர் கையில்', "திறன், மதிப்பீடு, வேகம்', "இந்தியாவில் உருவாக்குவோம்', "சுற்றுச் சூழலுக்கு கோளாறும் இல்லை; விளைவுகளும் இல்லை' ஆகியசிந்தனையை மனதில் கொண்டு இப்பணியை நாம் மேற்கொள்ளவேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சிவங்கி உதவியுடன் ரூ.35 கோடி அளவுக்கு "ஜவுளி முதலீடு நிதியம்' உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிதி வரும்காலங்களில் படிப்படியாக அதிகரிக்கப்படும். கைத்தறி தயாரிப்புகளின் விநியோக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக "ஃபிலிப்கார்ட்' இணைய தளம் மூலம் ஆன்லைன் விற்பனைக்கான சேவையை தொடங்கவுள்ளோம். கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி சங்கங்கள் ஆகியவற்றின் சேவையை மத்திய சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைத்து விற்பனையை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இதன் ஒருபகுதியாக நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தை "மாதிரி கிராமம்' ஆக மாற்றும் திட்டத்தை தயாரித்துவருகிறோம்' என்றார் சந்தோஷ் குமார் கங்குவார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...