ஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்குடன் புதியதிட்டங்கள்

 ஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்குடன் புதியதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்துள்ளார் .

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில ஜவுளித்துறை அமைச்சர்களின் வருடாந்திர மாநாட்டுக்கு தலைமைவகித்து அவர் பேசியதாவது: ஜவுளித் துறையை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஜவுளிவளங்களைக் கண்டறிந்து அதன் தயாரிப்பு, ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்.

பிரதமரின் "அனைவரின் வளர்ச்சியும் அவரவர் கையில்', "திறன், மதிப்பீடு, வேகம்', "இந்தியாவில் உருவாக்குவோம்', "சுற்றுச் சூழலுக்கு கோளாறும் இல்லை; விளைவுகளும் இல்லை' ஆகியசிந்தனையை மனதில் கொண்டு இப்பணியை நாம் மேற்கொள்ளவேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சிவங்கி உதவியுடன் ரூ.35 கோடி அளவுக்கு "ஜவுளி முதலீடு நிதியம்' உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிதி வரும்காலங்களில் படிப்படியாக அதிகரிக்கப்படும். கைத்தறி தயாரிப்புகளின் விநியோக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக "ஃபிலிப்கார்ட்' இணைய தளம் மூலம் ஆன்லைன் விற்பனைக்கான சேவையை தொடங்கவுள்ளோம். கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி சங்கங்கள் ஆகியவற்றின் சேவையை மத்திய சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைத்து விற்பனையை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இதன் ஒருபகுதியாக நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தை "மாதிரி கிராமம்' ஆக மாற்றும் திட்டத்தை தயாரித்துவருகிறோம்' என்றார் சந்தோஷ் குமார் கங்குவார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...