ஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்குடன் புதியதிட்டங்கள்

 ஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்குடன் புதியதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்துள்ளார் .

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில ஜவுளித்துறை அமைச்சர்களின் வருடாந்திர மாநாட்டுக்கு தலைமைவகித்து அவர் பேசியதாவது: ஜவுளித் துறையை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஜவுளிவளங்களைக் கண்டறிந்து அதன் தயாரிப்பு, ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்.

பிரதமரின் "அனைவரின் வளர்ச்சியும் அவரவர் கையில்', "திறன், மதிப்பீடு, வேகம்', "இந்தியாவில் உருவாக்குவோம்', "சுற்றுச் சூழலுக்கு கோளாறும் இல்லை; விளைவுகளும் இல்லை' ஆகியசிந்தனையை மனதில் கொண்டு இப்பணியை நாம் மேற்கொள்ளவேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சிவங்கி உதவியுடன் ரூ.35 கோடி அளவுக்கு "ஜவுளி முதலீடு நிதியம்' உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிதி வரும்காலங்களில் படிப்படியாக அதிகரிக்கப்படும். கைத்தறி தயாரிப்புகளின் விநியோக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக "ஃபிலிப்கார்ட்' இணைய தளம் மூலம் ஆன்லைன் விற்பனைக்கான சேவையை தொடங்கவுள்ளோம். கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி சங்கங்கள் ஆகியவற்றின் சேவையை மத்திய சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைத்து விற்பனையை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இதன் ஒருபகுதியாக நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தை "மாதிரி கிராமம்' ஆக மாற்றும் திட்டத்தை தயாரித்துவருகிறோம்' என்றார் சந்தோஷ் குமார் கங்குவார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...