இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்துபேர் விடுதலை செய்யப்பட்டதற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, உண்வர் பூர்மான பிரச்சினையில் கூட்டுநடவடிக்கை எடுத்து தீர்வுகண்ட இந்தியா மற்றும் இலங்கையின் தலைவர்களுக்கு நாடு நன்றிக் கடன் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:"தமிழக மீனவர்களின் உணர்ச்சி பூர்வமான பிரச்சினைக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே , மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரின் கூட்டு முயற்சியால் விளைந்த தீர்வுக்கு நாடு நன்றிக் கடன் பட்டுள்ளது.இந்த மீனவர்களை இந்தியாவுக்கு மாற்றுவதற்கு உதவும் 2010ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை நான் இருவரின் ) கவனத்திற்கு கொண்டுசென்றது பற்றி மிக்க மகிழ்ச்சி யடைகிறேன்" , இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் உரையாடல் மூலம் முறிவுகண்ட இந்தியா இலங்கை உறவுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
போதைபொருள் கடத்தியாக கூறப்பட்ட வழக்கில் தமிழக மீனவர்கள் ஐந்துபேருக்கு இலங்கையில் உள்ள நீதிமன்றம் அண்மையில் தூக்குதண்டனை அளித்தது. இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்ததையடுத்து இன்று விடுதலை ஆகிறார்கள்.
You must be logged in to post a comment.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
1consumes