தீவிரம் அடையும் பாஜகவின் டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரம்

 டெல்லி சட்டப் பேரவை தேர்தலுக்கான பாஜக பிரசாரத்தில், முதல்முறையாக வரும் 10ம்தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேச உள்ளார்.

டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் . பாஜக பல்வேறு கட்டங்களாக தன்னுடைய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்ட பிரசாரத்தில், அக்கட்சியின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200 எம்பி.க்கள் கலந்துகொண்டு பேசினர். இந்நிலையில், அடுத்த கட்டமாக இன்று முதல் 2வது கட்டபிரசாரத்தை பாஜக தொடங்குகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு 70 கூட்டங்களை நடத்த கட்சியின் தலைமை முடிவுசெய்துள்ளது. இதில், கட்சியின் உள்ளூர் எம்.பி.க்கள் கலந்துகொண்டு பேச உள்ளனர்.

இதற்கிடையே, பாஜக பிரசாரத்துக்கு மேலும் உத்வேகம் அதிகம் அளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச முடிவு செய்துள்ளார். இதன்படி, வரும் 10ம்தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் பிரமாண்ட பாஜக பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேச உள்ளார்.

பிரதமரின் கூட்டத்துக்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்களை அழைத்துவர பாஜக தலைவர்கள் தயாராகி வருகின்றனர். பிரதமரின் பிரசாரத்துக்கு பின்பு, நாடுமுழுவதும் இருந்து முக்கியமான பாஜக தலைவர்களை டெல்லிக்கு அழைத்துவந்து பிரசாரத்தில் ஈடுபடுத்த கட்சித்தலைமை முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...