பிரதமராக வேண்டும் என்ற தனிப்பட்ட நோக்கமே நிதீஷ்குமார் எங்களை விட்டு விலகக் காரணம்

 பிரதமராக வேண்டும் என்ற தனிப்பட்ட நோக்கம் காரணமாகவே நிதீஷ்குமார் எங்கள் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

இது தெடார்பாக பிகார் மாநிலம், பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒருகாலத்தில் லாலு பிரசாத்தும், நிதீஷ் குமாரும் கூட்டாக காங்கிரûஸ எதிர்த்தனர். பின்னர், பாஜக.,வுடன் அணி சேர்ந்த நிதீஷ் குமார் 17 ஆண்டுகளாக லாலுவை எதிர்த்து வந்தார். தற்போது அவர்கள் அனைவரும் கைகோக்கின்றனர். எனவே தான் இவர்கள் அனைவரும் இணைந்து ஜனதா கட்சியை உருவாக்க முற்படுவதை நேர்மையற்ற நடவடிக்கை என்று கூறுகிறேன்.

ஜனதா கட்சிகள் இணைவதை பற்றி எங்கள் கட்சி கொஞ்சமும் கவலைப்பட வில்லை. ஏனெனில் மக்கள் அவர்களை, எதிர்வரும் பிகார்பேரவை தேர்தலில் நிராகரிப்பார்கள். முதல்வர் பதவியில் இருந்து ஜிதன் ராம் மாஞ்சி நீக்கப்பட்டால், அப்போது அவருக்கு ஆதரவு அளிப்பதை பொருத்த வரை, அப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டால் அது குறித்துப் பரிசீலிப்போம்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 இடங்களில் எங்கள் கட்சி 185க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று, ஆட்சி அமைக்கும். இத்தேர்தலில் யாரையாவது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டுமா என்பது குறித்து கட்சியின் ஆட்சிமன்ற குழு முடிவுசெய்யும்.

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கப்படும் விவகாரத்தை பொருத்த வரை, பிகாரில் ஒரு நல்ல அரசு அமையும் போது அனைத்தும் வழங்கப்படும். நரேந்திர மோடி அரசு என்பது ஐந்து ஆண்டுகளுக்கானதே தவிர சில மாதங்களுக்கானது அல்ல. எனினும், பிகாரில் மாநில அரசின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் நடத்தப்படுவதை பாஜக எப்போதும் விரும்பிய தில்லை. பிரதமராக வேண்டும் என்ற தனிப்பட்ட நோக்கம் காரணமாகவே நிதீஷ்குமார் எங்கள் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டார்.

நிதீஷ்குமார் கட்சியுடனான கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியபின்பு, பிகார் மீண்டும் காட்டாட்சிக்குத் திரும்பிவிட்டது. மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது மாநிலம் வளர்ச்சியடைந்தது பாஜகவால் தான் என்பதை இது நிரூபித்துள்ளது.

பிகாரில் 75 லட்சம் உறுப்பினர்களையும், நாடுமுழுவதும் 10 கோடி உறுப்பினர்களையும் பாஜகவில் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளேன் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...