நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்தது உறுதி

 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் எடுக்க, தனியார் நிறுவனங்கள் போட்டிபோடுவதை பார்க்கும்போதும், ஏலத்தில் ஏராளமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டியதை பார்க்கும் போதும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்தது உறுதியாகிறது,'' என, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

நிலக்கரி சுரங்க உரிமங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, பாஜக., புகார் கூறியபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அதைமறுத்தார். அதன்பின், சி.ஏ.ஜி., வெளியிட்ட அறிக்கையில் முறைகேடுகள் அம்பலமாகின. மொத்தம், 1.86 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்தது. நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்தில், தனியார் நிறுவனங்கள் காட்டும் ஆர்வம், எவ்வளவு தொகைக்கும் ஏலம் எடுக்கதுணியும் நிறுவனங்கள் போன்றவற்றை பார்க்கும்போது, முறைகேடு நடந்தது உண்மைதான் என்பது தெரியவருகிறது. ஆனால், முந்தைய நிதியமைச்சகம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், அரசுக்கு நஷ்டமேவரவில்லை என கூறியது. இவ்வாறு, வெங்கையா நாயுடு கூறினார்.

முதல் தொகுப்பு, சமீபத்தில் ஏலம்விடப்பட்டது. ஏலம் துவங்கிய நான்கு நாட்களிலேயே, 60 ஆயிரம்கோடி ரூபாய் அரசுக்கு கிடைத்தது. முதற்கட்டமாக, மொத்தம், 19 தொகுப்புகள் ஏலமிடப்பட உள்ளன. அவற்றில், 14 தொகுப்புகள் ஏலம்போயின. அதில், 80 ஆயிரம்கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இரண்டாவது ஏலம், இம்மாதம் 25 முதல், மார்ச் 5 வரை நடக்கிறது. அதில், 43 தொகுப்புகள் ஏலமிடப்பட உள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...