நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்தது உறுதி

 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் எடுக்க, தனியார் நிறுவனங்கள் போட்டிபோடுவதை பார்க்கும்போதும், ஏலத்தில் ஏராளமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டியதை பார்க்கும் போதும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்தது உறுதியாகிறது,'' என, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

நிலக்கரி சுரங்க உரிமங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, பாஜக., புகார் கூறியபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அதைமறுத்தார். அதன்பின், சி.ஏ.ஜி., வெளியிட்ட அறிக்கையில் முறைகேடுகள் அம்பலமாகின. மொத்தம், 1.86 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்தது. நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்தில், தனியார் நிறுவனங்கள் காட்டும் ஆர்வம், எவ்வளவு தொகைக்கும் ஏலம் எடுக்கதுணியும் நிறுவனங்கள் போன்றவற்றை பார்க்கும்போது, முறைகேடு நடந்தது உண்மைதான் என்பது தெரியவருகிறது. ஆனால், முந்தைய நிதியமைச்சகம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், அரசுக்கு நஷ்டமேவரவில்லை என கூறியது. இவ்வாறு, வெங்கையா நாயுடு கூறினார்.

முதல் தொகுப்பு, சமீபத்தில் ஏலம்விடப்பட்டது. ஏலம் துவங்கிய நான்கு நாட்களிலேயே, 60 ஆயிரம்கோடி ரூபாய் அரசுக்கு கிடைத்தது. முதற்கட்டமாக, மொத்தம், 19 தொகுப்புகள் ஏலமிடப்பட உள்ளன. அவற்றில், 14 தொகுப்புகள் ஏலம்போயின. அதில், 80 ஆயிரம்கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இரண்டாவது ஏலம், இம்மாதம் 25 முதல், மார்ச் 5 வரை நடக்கிறது. அதில், 43 தொகுப்புகள் ஏலமிடப்பட உள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...