மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளுடன் உரையாடும் பிரதமர்

 வானொலி மூலம் மக்களிடம் நேரடியாக உரை யாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, இம்முறை மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளுடன் உரையாடுகிறார்..

இந்நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் வரும் 22 ஆம் தேதி காலை 11 மணி அளவில் ஒலிபரப்பாக உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் வேளாண் மற்றும் அதன் சார்துறைகள் பற்றி உரையாடுவார். விவசாயிகளுடன் மற்ற குடிமக்களும் தங்கள் கருத்துக்களை "mygov.in" என்ற இணையதளத்தில் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மனதின் குரல் நிகழ்ச்சிமூலம் இது வரை பிரதமர் ஐந்து முறை நாட்டு மக்களுடன் உரையாற்றியுள்ளார். மக்களின் மனதிற்கு நெருக்கமான பலபிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். தூய்மை இந்தியா திட்டம், காதிமேம்பாடு, திறன் மேம்பாடு, ஊனமுற்றோர்களுக்கான கல்வி உதவித் தொகை, கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு குறித்து அவர் உரையாடினார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் முந்தையபகுதி கடந்த பிப்ரவரி மாதம் 22 ம் தேதி நடைபெற்றது. அப்போது பிரதமர், தேர்வு குறித்த மனக் கவலையையும் கலக்கத்தையும் விட்டுத்தள்ளி ஒருசாதகமான அணுகு முறையை மேற்கொள்ளுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

இந்த மனதின்குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஒருமுறை அமெரிக்க அதிபர் ஒபாமா உடன் பகர்ந்து கொண்டார். அப்போது இரு தலைவர்களும் பலபிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேசினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான மக்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது. அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் அதேநேரம் இந்த நிகழ்ச்சி பொதிகை, விவித்பாரதி, எப்.எம். கோல்ட், ரெயின்போ வானொலி ஆகியவற்றில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. பிரதமர் அலுவலக இணையதளம் மூலமாகவும் இந்த நிகழ்ச்சியை காணலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...