மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளுடன் உரையாடும் பிரதமர்

 வானொலி மூலம் மக்களிடம் நேரடியாக உரை யாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, இம்முறை மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளுடன் உரையாடுகிறார்..

இந்நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் வரும் 22 ஆம் தேதி காலை 11 மணி அளவில் ஒலிபரப்பாக உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் வேளாண் மற்றும் அதன் சார்துறைகள் பற்றி உரையாடுவார். விவசாயிகளுடன் மற்ற குடிமக்களும் தங்கள் கருத்துக்களை "mygov.in" என்ற இணையதளத்தில் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மனதின் குரல் நிகழ்ச்சிமூலம் இது வரை பிரதமர் ஐந்து முறை நாட்டு மக்களுடன் உரையாற்றியுள்ளார். மக்களின் மனதிற்கு நெருக்கமான பலபிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். தூய்மை இந்தியா திட்டம், காதிமேம்பாடு, திறன் மேம்பாடு, ஊனமுற்றோர்களுக்கான கல்வி உதவித் தொகை, கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு குறித்து அவர் உரையாடினார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் முந்தையபகுதி கடந்த பிப்ரவரி மாதம் 22 ம் தேதி நடைபெற்றது. அப்போது பிரதமர், தேர்வு குறித்த மனக் கவலையையும் கலக்கத்தையும் விட்டுத்தள்ளி ஒருசாதகமான அணுகு முறையை மேற்கொள்ளுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

இந்த மனதின்குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஒருமுறை அமெரிக்க அதிபர் ஒபாமா உடன் பகர்ந்து கொண்டார். அப்போது இரு தலைவர்களும் பலபிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேசினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான மக்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது. அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் அதேநேரம் இந்த நிகழ்ச்சி பொதிகை, விவித்பாரதி, எப்.எம். கோல்ட், ரெயின்போ வானொலி ஆகியவற்றில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. பிரதமர் அலுவலக இணையதளம் மூலமாகவும் இந்த நிகழ்ச்சியை காணலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...