காஷ்மீரில் வெள்ளப் பெருக்கு நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு

 காஷ்மீரில் கன மழை காரணமாக ஜீலம் ஆறு அபாயகட்டத்தை தாண்டிபாய்கிறது. கரையோரங்களில் உடைப்பெடுக்கும் அபாயம் இருப்பதால் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். நிலச் சரிவில் வீடுகள் இடிந்து 8 பேர் உயிரிழந்தனர்
.

பிரதமர் நரேந்திரமோடி உத்தரவின் பேரில் சேதப் பகுதிகளை பார்வையிட மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி விரைந்துள்ளார்.

காஷ்மீரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழைவெள்ளத்தில் நூற்றுக்கானோர் உயிர் இழந்தனர். இந்தசோகம் நடந்த ஒரு ஆண்டுக்குள் மீண்டும் அங்கு மழைவெள்ளம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் மத்திய காஷ்மீரில் உள்ள பட்கம் மாவட்டம் சான்டினார் கிராமத்தில் நிலச் சரிவு ஏற்பட்டது. இதில் 8 வீடுகள், 10 மாட்டு கொட்டகைகள் முற்றிலும் இடிந்துவிழுந்தன. மேலும் 26 வீடுகள் சேதமடைந்தன. இன்னும் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்தது. இந்நிலையில் பட்காம் மாவட்டத்தில் வீடுகள் இடிந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீ நகரில் ராஜ் பாக் பகுதியில் தண்ணீர் தேங்கிநிற்கிறது. ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. சாலை மூடப்பட்டது. தொடர்ந்து அங்கு கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஸ்ரீநகரில் ஜீலம் ஆறு அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது.

தெற்குகாஷ்மீரின் சங்காம் பகுதியிலும் ஆற்றில் தண்ணீர் அபாயகட்டத்தை தாண்டிசெல்கிறது.ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.ஆற்றில் தண்ணீர் அளவு 23 அடியை தாண்டிசென்றால், மாநில அரசு கரையோரத்தில் இருக்கும் மக்களை வெளியேற்றுவதில் தீவிரமாக ஈடுபடும்.

தொடர்ந்து அங்கு மழைபெய்யும் என்றே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் தொடர்பாக பீதி அடைய தேவை யில்லை என்று ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடு முறை அளிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீருக்கு அனைத்து உதவிகளையும் செய்யதயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நிவாரண உதவி பொருட்களுடன் அங்கு விமானம் விரைகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...