இதுவரை ஆண்டவர்களில் மோடியே சிறந்தவர் கருத்து கணிப்பு

 கருத்து கணிப்பில், நரேந்திர மோடி அரசின் செயல் பாட்டுக்கு 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது வரை இந்தியாகண்ட பிரதமர்களில் மோடியே சிறந்தவர் என்றும் கூறியுள்ளனர்.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவி ஏற்று, ஓராண்டு நெருங்கும் நிலையில், மக்களின் மனநிலை குறித்து இந்தியாடுடே குழுமமும், சிக்ரோ என்ற அமைப்பும் இணைந்து நாடுமுழுவதும் கருத்து கணிப்பு நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி, 69 சதவீதம் பேர், மோடி அரசு, எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவும், எதிர்பார்த்ததை போலவும் செயல்படுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். 25 சதவீதம் பேர், எதிர்பார்த்தது போல செயல்படவில்லை என்று கூறியுள்ளனர்.

இதுவரை இருந்த பிரதமர்களில் சிறந்தவர் என 30 சதவீதம் பேரின் ஆதரவுடன் முதலிடத்தை பிடித்துள்ளார், மோடி. முன்னாள்பிரதமர் வாஜ்பாய் 20 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்தையும் , இந்திரா காந்தி 13 சதவீத ஆதரவுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மோடி, வளர்ச்சி ,நல்ல நிர்வாகத்தின் பிரதிநிதியாக உள்ளதாக 52 சதவீதம் பேரும், இந்துத்துவாவின் பிரதிநிதியாக இருப்பதாக 16 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆர்எஸ்எஸ்.சின் கட்டுப்பாட்டில் மோடி இருப்பதாக 36 சதவீதம் பேரும், அப்படி இல்லை என 39 சதவீத பேரும் கூறியுள்ளனர்.

மோடி அரசால் பொருளாதாரம் முன்னேறி உள்ளதாக 36 சதவீதம் பேரும், முன்னேறவில்லை என 29 சதவீதம் பேரும் கருத்து தெரிவித் துள்ளனர்.

விலை வாசி பிரச்சினையில் முதலில் கவனம் செலுத்தவேண்டும் என 27 சதவீத பேரும், ஊழல் ஒழிப்பில் முதலில் கவனம் செலுத்தவேண்டும் என 24 சதவீதம் பேரும், ராமர் கோவிலுக்கு முன்னுரிமை தர வேண்டும் என 3 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

மோடி அரசின் 10மாத சாதனையாக, இந்தியாவின் கவுரவம் சர்வதேசளவில் உயர்ந்தது என்பதை 34 சதவீத பேரும், ஊழலை ஒழித்தது என்பதை 13 சதவீத பேரும் கூறியுள்ளனர்.

பிரதமரின் வெளிநாட்டு பயணங்களை விரும்புவதாக 44 சதவீத பேரும், அவர் வெளிநாட்டு பயணங்களை குறைத்து கொள்ளவேண்டும் என்று 39 சதவீதம் பேரும் கருத்து தெரிவித் துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...