மோடி ‘இந்தியாவின் தலைமை சீர்திருத்த வாதி

 அமெரிக்காவில் இருந்து வெளிவருகிற பிரபல பத்திரிகையான 'டைம்'. ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களை தேர்வுசெய்து வெளியிட்டு வருகிறது. 2015–ம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ரஷிய அதிபர் விளாடிமிர்புதின், சீன அதிபர் ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்கள் இடம் பிடித்துள்ளனர்.ஒவ்வொரு தலைவர் பற்றியும்,

மற்றொரு தலைவர் குறிப்பு எழுதியுள்ளனர்.அதில் மோடியை , 'இந்தியாவின் தலைமை சீர்திருத்த வாதி' என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எழுதி புகழாரம் சூட்டி உள்ளார்.

அதில் அவர் மேலும் கூறி இருப்பதாவது:–

சிறுவனாக இருந்த போது, நரேந்திர மோடி தனது குடும்பத்துக்கு ஆதரவாக தந்தைக்கு டீ விற்பனைசெய்ய உதவி இருக்கிறார். இன்றைக்கு அவர் உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர். அவரது வாழ்க்கை, வறுமையில் இருந்து பிரதமர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் எழுச்சியின் ஆற்றலையும் திறனையும் பிரதிபலிக்கிறது.

தனது பாதையில் ஏராளமான இந்தியர்கள் பீடு நடை போடுவதற்கு உதவுவதற்கு அவர் உறுதி பூண்டுள்ளார். வறுமைகுறைப்பு, கல்வி மேம்பாடு, பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் அதிகாரம் வழங்குதல், பருவநிலை மாற்றத்துக்கு மத்தியிலும் இந்தியாவின் உண்மையான பொருளாதார வளத்தை கட்ட விழ்த்து விடுவதற்கு அவர் லட்சியதிட்டம் தீட்டி உள்ளார்.

இந்தியாவைப் போன்று, அவர் நவீனத்தையும், பழமையையும் கடந்துசெல்கிறார். யோகா பயிற்சி செய்கிற அவர், இந்தியமக்களுடன் டுவிட்டரில் தொடர்பு கொள்கிறார். டிஜிட்டல் இந்தியாவை கற்பனைசெய்கிறார்.

அவர் வாஷிங்டன் வந்த போது, அவரும், நானும் டாக்டர் மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் நினைவு சின்னத்துக்கு சென்றிருந்தோம். நாங்கள் மார்ட்டின் லூதர்கிங், மகாத்மாகாந்தி ஆகியோரின் போதனைகளை பிரதிபலித்தோம். எங்கள் நாடுகளில் உள்ள பன்முகத் தன்மையின் பின்னணி, மத நம்பிக்கை எப்படி போற்றி பாதுகாக்கத்தக்க வலிமை வாய்ந்தவை என்பதை விவாதித்தோம்.

100 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்கள் இணைந்துவாழ்வது, உலகிற்கே ஊக்கம் தரத்தக்க எழுச்சியூட்டும் முன் மாதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி அங்கீகரித்துள்ளார்.என்று அவர் அதில் எழுதி உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...