மோடி ‘இந்தியாவின் தலைமை சீர்திருத்த வாதி

 அமெரிக்காவில் இருந்து வெளிவருகிற பிரபல பத்திரிகையான 'டைம்'. ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களை தேர்வுசெய்து வெளியிட்டு வருகிறது. 2015–ம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ரஷிய அதிபர் விளாடிமிர்புதின், சீன அதிபர் ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்கள் இடம் பிடித்துள்ளனர்.ஒவ்வொரு தலைவர் பற்றியும்,

மற்றொரு தலைவர் குறிப்பு எழுதியுள்ளனர்.அதில் மோடியை , 'இந்தியாவின் தலைமை சீர்திருத்த வாதி' என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எழுதி புகழாரம் சூட்டி உள்ளார்.

அதில் அவர் மேலும் கூறி இருப்பதாவது:–

சிறுவனாக இருந்த போது, நரேந்திர மோடி தனது குடும்பத்துக்கு ஆதரவாக தந்தைக்கு டீ விற்பனைசெய்ய உதவி இருக்கிறார். இன்றைக்கு அவர் உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர். அவரது வாழ்க்கை, வறுமையில் இருந்து பிரதமர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் எழுச்சியின் ஆற்றலையும் திறனையும் பிரதிபலிக்கிறது.

தனது பாதையில் ஏராளமான இந்தியர்கள் பீடு நடை போடுவதற்கு உதவுவதற்கு அவர் உறுதி பூண்டுள்ளார். வறுமைகுறைப்பு, கல்வி மேம்பாடு, பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் அதிகாரம் வழங்குதல், பருவநிலை மாற்றத்துக்கு மத்தியிலும் இந்தியாவின் உண்மையான பொருளாதார வளத்தை கட்ட விழ்த்து விடுவதற்கு அவர் லட்சியதிட்டம் தீட்டி உள்ளார்.

இந்தியாவைப் போன்று, அவர் நவீனத்தையும், பழமையையும் கடந்துசெல்கிறார். யோகா பயிற்சி செய்கிற அவர், இந்தியமக்களுடன் டுவிட்டரில் தொடர்பு கொள்கிறார். டிஜிட்டல் இந்தியாவை கற்பனைசெய்கிறார்.

அவர் வாஷிங்டன் வந்த போது, அவரும், நானும் டாக்டர் மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் நினைவு சின்னத்துக்கு சென்றிருந்தோம். நாங்கள் மார்ட்டின் லூதர்கிங், மகாத்மாகாந்தி ஆகியோரின் போதனைகளை பிரதிபலித்தோம். எங்கள் நாடுகளில் உள்ள பன்முகத் தன்மையின் பின்னணி, மத நம்பிக்கை எப்படி போற்றி பாதுகாக்கத்தக்க வலிமை வாய்ந்தவை என்பதை விவாதித்தோம்.

100 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்கள் இணைந்துவாழ்வது, உலகிற்கே ஊக்கம் தரத்தக்க எழுச்சியூட்டும் முன் மாதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி அங்கீகரித்துள்ளார்.என்று அவர் அதில் எழுதி உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...