சவாலான சூழலில் நேபாளத்தில் இருந்து 1935 பேர் மீட்பு

 நேபாளத்தில் நேற்று முன்தினம் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக பதிவானது. இதில், பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

குறிப்பாக, தலைநகர் காத் மாண்டுவில் 12-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் இடிந்து விழுந்தன.

தர்பார் சதுக்கத்தில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில், 9 தளங்கள் மற்றும் 200 சுருள் வளைவு படிக்கட்டுகளைக் கொண்டிருந்த தரஹரா கோபுரமும் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே மீட்புப்பணியில் இந்திய விமானப்படை முழு வீச்சில் இறங்கியது. ஆபரேஷன் மைத்ரி என்று பெயரிடப்பட்ட மீட்பு நடவடிக்கை கடுமையான சவால்களுக்கு இடையே நடந்துவருகிறது. இமாலயத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் புவியியல் ரீதியில் மிட்புப்பணிகளை மிகவும் சவாலானதாக மாற்றியுள்ளது.

மீட்புப்பணிகள் குறித்து இந்திய விமானப் படை மற்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் அவ்வப்போதைய நிலவரத்தை ட்விட்டர் குறும்பதிவு தளத்தில் தெரிவித்துவருகிறது.

அதன்படி, நேபாளத்தில் சனிக் கிழமை அன்று நிலநடுக்கம் ஏற்பட்ட சிலமணி நேரத்தில் அதன் விளைவுகள் குறித்து யூகித்து அடுத்து 4 மணி நேரத்துக்குள் C-17 ரகவிமானம் 96 வீரர்களுடன் 15 டன் எடையில் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டு சென்றது. அடர்ந்த உயரிய மலை பிரதேசமான நேபாளத்தில், நில நடுக்கத்தால் ஏற்பட்ட பெரும் இடிபாடுகளில் சிக்கிய மக்களை கண்டறிவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. இதற்காக மோப்பநாய்கள் மற்றும் அதிநவீன சென்சார் கருவிகள் பயன்படுத்தப் பட்டன.

அடுத்தகட்டமாக 24 மருத்துவ அதிகாரிகள் அடங்கிய அவசரக்குழு வினருடன் அடுத்தடுத்து 2 விமானங்கள் காத்மண்டு சென்றடைந்தன. இந்த முதற் கட்ட நடவடிக்கையில் 546 பேரை பேரிடர் மீட்புக்குழு மீட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டமாக நடந்த மீட்புப்பணியில் 1,935 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 1935 பேர் தாயகம் திரும்பினர்.

இந்திய விமானப்படையின் விமானங்கள் 10 விமான ங்களின் மூலம் 500 டெண்ட்டுகள், 14 டன் நூடுல்ஸ் பொட்டலங்கள், 100 ஸ்ட்ரெச்சர்கள், ஒருடன் மருந்துவ பொருட்கள் என உதவிப் பொருட்களை கொண்டு சென்றது. மீட்புப்பணீயில் இருக்கும் ஹெலிகாப்டர்களை சிறப்புக்குழு கண்காணித்து வழி நடத்தி வருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...