75-வது சுதந்திர தினத்தையொட்டி பலநாடுகளின் கட்டிடங்கள், சுற்றுலாஇடங்கள் மூவர்ணத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரகங்கள் இந்தயாவின் 75-வது சுதந்திரதின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
அமெரிக்க, இங்கிலாந்து, துபாய்,உள்ளிட்ட பலமுக்கிய நாடுகளில் 75 மதிப்புமிக்க கட்டிடங்கள் மற்றும் சுற்றுலாஇடங்கள் ஆகஸ்ட் 15 மாலை முதல் ஆகஸ்ட் 16 காலை வரை இந்திய மூவர்ணத்தின் வெளிச்சத்தில் பிரகாசிக்கின்றன.
அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட்கட்டடம் அது மட்டுமல்ல உலகப் புகழ் பெற்ற நயாகராவின் அலைகள் கனாடாவில் உள்ள நீர் வீழ்ச்சியும் மூவர்ணத்தில் இருக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மூவர்ண விளக்குகளால் ஒளிரும் முக்கிய கட்டிடங்களில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்சபையின் தலைமையகம், யுனைடேட் ஸ்டேட்ஸ் உள்ள எம்பயர்ஸ்டேட் கட்டிடடம், துபாயில் உள்ள புர்ஜ் கலீபா, ரஷ்யாவின் பரிணாம கோபுரம் அபுதாபியில் உள்ள புகழ்பெற்ற அட்னோக் குழு கோபுரம், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்தின் பர்மிங்காமின் புகழ்பெற்ற நூலகக் கட்டிடம்.
இந்தியாவின் சுதந்திர வரலாற்றோடு தொடர்புடைய பெருமை தருணங்களை நினைவுகூறுவதே இதன் நோக்கம், வெளிநாடுகளில் வாழும் ஏரளாமான இந்தியர்கள் முழு ஆர்வத்துடன் அதில்சேர்கிறார்கள்.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |