மோடியின் டுவிட்டர் பதிவு மூலமே நிலநடுக்கம் ஏற்பட்டதை தெரிந்து கொண்ட நேபாள பிரதமர்!

 நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த் செய்தியை அந்நாட்டு பிரதமர் சுஷில்கொய்ராலா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பதிவு மூலமே தெரிந்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தை கடந்த சனிக் கிழமை புரட்டிபோட்டி நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.9 என்ற அளவுக்கு பதிவானது. நில நடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய் ராலா தாய்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தார்.

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு மருத்துவ சிகிச்சைக்காக பாங்காங் சென்று கொண்டிருந்தார். பாங்காக் விமானநிலையத்தில் கொய்ராலா தரையிறங்கியவுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேபாள நில நடுக்கம் குறித்து பதிவு செய்திருந்த டுவிட்டர் தகவலை பார்த்துதான் நிலநடுக்கம் ஏற்பட்டதை அவர் அறிந்துள்ளார்.

இதைதொடர்ந்து உடனடியாக அதிகாரிகளிடம் நில நடுக்கம் பற்றிய விரிவான தகவல்களை கேட்டறிந்துள்ளார். இந்த தகவலை நேபாள வெளியுறவுதுறை அமைச்சர் மகேந்திர பாக்தூர் பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாசெய்யும் உதவிகளுக்கு பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு செய்யும் உதவியை நாங்கள் போற்றுகிறோம். இந்தியபிரதமருக்கு நன்றி தெரிவிக்க எங்களுக்கு வார்த்தையே இல்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...