தமிழக அரசு முடங்கியுள்ளது

 அதிமுக., தலைமையிலான தமிழக அரசு முடங்கியுள்ளது; யார் முதல்வர் என்றே தெரிந்துகொள்ள முடியவில்லை,'' என, தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், 2016ல், பா.ஜ.க, ஆட்சி அமைக்கும். மக்களோடு இணைந்து மத்திய அரசு பணியாற்ற உள்ளது. வரும் 16ல், தமிழகத்தில், 32 மாவட்டங்களிலும், 29 மத்திய அமைச்சர்கள், மூன்று மாநிலமுதல்வர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, தீர்வுகாண உள்ளனர்.

'2ஜி' ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஊழல் முறை கேடுகளில் சிக்கியுள்ள காங்கிரஸ், ஊழலை சுட்டிக்காட்டும் பேரணியை நடத்தியிருப்பதை ஏற்கமுடியாது. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதா, ரியல் எஸ்டேட் மசோதா, சாலைபாதுகாப்பு மசோதா ஆகியவை, மக்களுக்கு நன்மை தரக்கூடியவை. விரைவில் நீர் வழி பாதுகாப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட உள்ளது.

அ.தி.மு.க., தலைமையிலான தமிழக அரசு முடங்கியுள்ளது. யார்முதல்வர் என்றே தெரிந்துகொள்ள முடியவில்லை.தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் விரைவு படுத்தப்படும். தமிழகத்தில் பாஜக., ஆட்சி அமைந்தால், பூரணமதுவிலக்கு கொண்டுவரப்படும். பா.ஜ.,வில் இது வரை, 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். பா.ஜ.,வுடன் எந்தகட்சி சேர்ந்திருக்கும் அல்லது விலகியிருக்கும் என, தேர்தல் நேரத்தில் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.இலவச பொருட்கள் வழங்காமல், மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவே, பா.ஜ.க, முனைப்புகாட்டி வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...