தமிழக அரசு முடங்கியுள்ளது

 அதிமுக., தலைமையிலான தமிழக அரசு முடங்கியுள்ளது; யார் முதல்வர் என்றே தெரிந்துகொள்ள முடியவில்லை,'' என, தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், 2016ல், பா.ஜ.க, ஆட்சி அமைக்கும். மக்களோடு இணைந்து மத்திய அரசு பணியாற்ற உள்ளது. வரும் 16ல், தமிழகத்தில், 32 மாவட்டங்களிலும், 29 மத்திய அமைச்சர்கள், மூன்று மாநிலமுதல்வர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, தீர்வுகாண உள்ளனர்.

'2ஜி' ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஊழல் முறை கேடுகளில் சிக்கியுள்ள காங்கிரஸ், ஊழலை சுட்டிக்காட்டும் பேரணியை நடத்தியிருப்பதை ஏற்கமுடியாது. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதா, ரியல் எஸ்டேட் மசோதா, சாலைபாதுகாப்பு மசோதா ஆகியவை, மக்களுக்கு நன்மை தரக்கூடியவை. விரைவில் நீர் வழி பாதுகாப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட உள்ளது.

அ.தி.மு.க., தலைமையிலான தமிழக அரசு முடங்கியுள்ளது. யார்முதல்வர் என்றே தெரிந்துகொள்ள முடியவில்லை.தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் விரைவு படுத்தப்படும். தமிழகத்தில் பாஜக., ஆட்சி அமைந்தால், பூரணமதுவிலக்கு கொண்டுவரப்படும். பா.ஜ.,வில் இது வரை, 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். பா.ஜ.,வுடன் எந்தகட்சி சேர்ந்திருக்கும் அல்லது விலகியிருக்கும் என, தேர்தல் நேரத்தில் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.இலவச பொருட்கள் வழங்காமல், மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவே, பா.ஜ.க, முனைப்புகாட்டி வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...