பிரான்சிடமிருந்து, 'ரபேல்' ரக போர் விமான ங்களை வாங்குவது தொடர்பான பேச்சு, விரைவில் துவங்கவுள்ளது,'' என, ராணுவ அமைச்சர் மனோகர்பாரிக்கர் கூறினார்.
பிரான்சிடமிருந்து, அதி நவீன ரபேல் ரக போர் விமான ங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம், 2007ம் ஆண்டிலேயே, இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே கையெழுத்தானது. ஆனாலும், விலைநிர்ணய விஷயத்தில் இழுபறி நீடித்ததால், பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வில்லை. இந்நிலையில் சமீபத்தில், பிரதமர் மோடி பிரான்சுக்கு சுற்றுப் பயணம் செய்த போது, இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. முதற்கட்டமாக, 36 விமானங்களை தர, பிரான்சு முன் வந்தது. இந்நிலையில், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியதாவது: பிரான்சு ராணுவ அமைச்சர் ழான் யுவேஸ் லி டிரெயன், அடுத்தவாரம் இந்தியா வருகிறார். அப்போது, ரபேல் போர் விமானங்கள் குறித்து பேச்சு நடக்க வுள்ளது. பேச்சை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க, அரசு திட்ட மிட்டுள்ளது. இதை யடுத்து, பிரான்சிடமிருந்து, 36 விமானங்கள் நமக்கு தரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.