காபூல் நகரில் விருந்தினர் மாளிகையில், தீவிரவாதிகள்

 காபூல் நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இந்தியர்கள் உள்ப்பட 7 பேர் உயிரிழந்தனர்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்நகரில் உள்ள பார்க்பிளேஸ் விருந்தினர் மாளிகையில், நேற்று இரவு ஆப்கானிஸ்தானை சேர்ந்த பாடகர் அல்தாப் ஹுசையின், விஐபி.களுக்கு விருந்து அளித்துள்ளார். இதில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு அதிகாரிகள் கலந்துகொண்டனர் . அப்போது விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் என 7 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாளிகைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை குறிவைத்து துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர்.

துப்பாக்கி சூடு நடந்த போது அங்கு 6 இந்தியர்கள் இருந்தனர். மூன்றுபேர் எப்படியோ வெளியே தப்பி ஓடிவந்துவிட்டனர். ஒரு வரை காணவில்லை. மாளிகையை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் வளைத்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்றும் உள்ளே இருந்த 56 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும் பிபிசி. செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் இந்திய தூதரகத்தை குறி வைத்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இச்சம்பவத்திற்கு கவலையை தெரிவித்துள்ளார். "நான் விமானத்தில் பயணம் செய்த போது, காபூல் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக செய்திவந்தது. காபூல் நகரில் தற்போது நிலவும் சூழ்நிலையில் நான்மிகவும் கவலை அடைந்து உள்ளேன். அனைவருடைய பாதுகாப்புக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்," என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...