சிவசேனாவுடன் கூட்டணி வைத்திருந்தால் நமது பலம் தெரியாமலேயே போயிருக்கும்

 சட்டமன்றதேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்திருந்தால், பா.ஜ.க.,வின் பலம் தெரியாமலேயே போயிருக்கும் என்று முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மராட்டிய பா.ஜ.க.,வின் 2 நாள் செயற்குழுகூட்டம் நேற்று கோலாப்பூரில் தொடங்கியது. இந்த கூட்டத்தை பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, முதல்–அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர். இதில் கட்சியின் மாநில தலைவர் ராவ் சாகேப் தன்வே மற்றும் மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:–

நடந்துமுடிந்த சட்ட மன்ற தேர்தலில் நாம் தனித்து போட்டியிடுவோம் என்பது எங்களுக்குதெரியாது. தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க 3 நாட்களே இருந்தநிலையில் அமித்ஷா எங்களை அழைத்தார். மராட்டியத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார். அப்போது தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து அவரிடம்கூறினோம். அதற்கு அவர் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் உங்களோடு இருப்பேன் என்றார்.

இதையடுத்து தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டி யிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த தேர்தலின்போது ஒரு மாத காலத்திற்கு அமித்ஷா மராட்டிய மாநிலத்தையே தன் வீடாக்கிக் கொண்டார். மூத்த தலைவர்களை களத்தில் இறங்கி தேர்தல்பணியாற்ற முடுக்கிவிட்டு தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றியை உறுதிப் படுத்தினார். மேலும் அவர் ஒவ்வொருவரின் பின்னாலும் இருந்து உற்சாகப் படுத்தினார்.

ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து நாம் போட்டியிட்டு இருந்திருந்தால் நம் பலம் நமக்குதெரியாமலேயே போயிருக்கும். நமது பலம் நமக்கு தெரியவந்ததன் பலனால்தான் உலகின் மிகப் பெரிய கட்சி ஆகி உள்ளோம்.என்று தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...