மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜூ, காஷ்மீர் துணை முதலமைச்சர் நிர்மல்சிங் உள்ளிட்ட மூவர் பயணம் செய்வதற்காக விமானத்தில் இருந்து மூன்று பேர் கீழே இறக்கப் பட்டதற்கு மத்திய அரசு மன்னிப்புக் கோரியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, மன்னிக்க முடியாத இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்க கூடாது எனக் குறிப்பிட்டார்.
அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கோருவதாக அவர் கூறினார்.விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு எத்தகை இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அமைச்சர்களுக்கு கூடுதலாக இருப்பதாக கஜபதி ராஜூ தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் கிரண் ரஜிஜூவும் மன்னிப்புக் கோரினார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.