இந்தியா – கஜகஸ்தான் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள்

 இந்தியா – கஜகஸ்தான் இடையே யுரேனியம் வழங்குவது உள்பட 5 முக்கிய ஒப்பந் தங்கள் பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் புதன்கிழமை கையெழுத்தாகின.

மத்திய ஆசிய நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடி, கஜகஸ்தானுக்கு செவ்வாய்க் கிழமை சென்றார். கஜகஸ்தான் தலை நகர் அஸ்தானா விமான நிலையத்தில், அந்நாட்டு பிரதமர் கரீம் மாஸிமோவ் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மோடிக்கு உற்சாகவரவேற்பு அளித்தனர்
அதன்பின்னர், அந்நாட்டு பிரதமர் கரீம் மாஸிமோவுடன் பேச்சு வார்த்தை நடத்திய மோடி, அங்குள்ள புகழ் பெற்ற நாஸர் பயேவ் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.

இதையடுத்து, கஜகஸ்தான் அதிபர் மாளிகையில் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அந்நாட்டு அதிபர் நூர்சுல் தான் நாஸர்பயேவை சந்தித்த மோடி, அவருக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட குரு கிரந்த் சாஹேப், சமண சமயநூலான கல்பசூத்ரா, புத்தசமய நூலான அஷ்ட சஹஸ்ரிக பிரக்ஞபரமிதா, பெர்சிய மொழி பெயர்ப்பிலான வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட நூல்களைப் பரிசாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து, அதிபர் நாஸர் பயேவுடன் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, இருநாடுகளிடையே பாதுகாப்பு, யுரேனியம் விற்பனை, வர்த்தகம், கனிமவளம் உள்ளிட்டவை தொடர்பான 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் மோடி கூறியதாவது: இந்தியா – கஜகஸ்தான் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் பல முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.
இருநாடுகளையும் பொருத்த வரை, பயங்கரவாதம் ஒரு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனை ஒன்றிணைந்து எதிர்க்கும் வகையில் பாதுகாப்பு துறையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதன்படி, இருநாட்டு உளவு தகவல்களை பரஸ்பரம் பரிமாறி கொள்ளுதல், இருநாட்டு ராணுவ வீரர்களின் கூட்டுப்பயிற்சி, சிறப்புப் படைகள் பரிமாற்றம், ராணுவத் தொழில்நுட்ப துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பு மேம்பாடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது உறுதியாகியுள்ளது.

பயங்கரவாதத்தை ஒன்றிணைந்து எதிர்ப்பது என்ற நிலைப் பாட்டை முன்னெடுத்துச் செல்லவும் இது உதவும். இதேபோல், கஜகஸ்தானிடம் இருந்து இந்தியாவுக்கு யுரேனியத்தை நீண்ட காலத்துக்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தமும் கையெழுத் தாகியுள்ளது. இது இந்தியாவின் மின்சாரத் தேவையைச் சமாளிக்கப் பயன்படும். இதுதவிர, கனிம வளங்கள் துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருக்கிறது என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...