திரை இசைக்கு உயிர் ஊட்டியவர் உயிர் துறந்து இருப்பதை பார்க்கும்போது மனது பதை பதைக்கிறது

 சென்னை தனியார் மருத்துவ மனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப் பட்டிருந்த, இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன், இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப் பட்டுள்ளது.

87 வயதான விஸ்வநாதன், 1200 திரைப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராம மூர்த்தி உடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசை அமைத் துள்ளார். தமிழ் தாய் வாழ்த்துப்பாடலான ‛நீராரும் கடலுடத்த..' பாடலுக்கு இசையமைத்த பெருமைக் குரியவர் எம்.எஸ்.வி., இவரது இறுதிச்சடங்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் நாளை நடைபெறுகிறது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

எம்.எஸ்.வி. மறைவு குறித்த இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது , "இசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

திரை இசைக்கு உயிர் ஊட்டி கொண்டிருந்தவர் உயிர் துறந்து படுத்து இருப்பதை பார்த்து பதை பதைக்கிறது நெஞ்சம். பாடிக் கொண்டிருந்த வாய் மூடிக்கிடப்பதும் தாளமிட்டு கொண்டிருந்த கைகள் துவண்டு கிடப்பதையும் பார்ப்பதற்கு நெஞ்சுறுதி வேண்டும்.

அவரது இழப்பை தாங்கிக்கொள்ளும் உறுதியை, தமிழக மக்களுக்கும் திரை உலகத்தினருக்கும் அவர் குடும்ப தாருக்கும் இறைவன் அருளவேண்டும். இசைத் துறையில் பல நட்சத்திரங்களை உருவாக்கிய அந்த மாமேதைக்கு அந்ததுறையில் பல இளைய தலை முறையினர்களை ஊக்கபடுத்துவதும் உருவாக்குவதுமே இச்சமுதாயம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கமுடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...