கலாமின் கடைசி நிமிடங்கள்

 அப்துல் கலாம் ஷில்லாங் சென்ற போது, அவருடன் சென்ற ஸ்ரீஜன் பால் சிங் என்பவர் தனது அனுபவத்தை முகநூலில் எழுதியுள்ளார். அவர் கூறியதன் முக்கிய சாராம்சம்: ஷில்லாங் மேலாண்மை கல்லூரியில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு பிறகு நாங்கள் சொற் பொழிவு அறைக்குள் நுழைந்தோம். மேடை ஏறியதும் அவர் பேசுவதற்கு தயார்செய்தேன். அதைப்பார்த்து சிரித்தார். ""எப்படி இருக்கீங்க'' என்று என்னைப்பார்த்து கேட்டார். நானும் "நன்றாக இருக்கிறேன்'' என பதில் அளித்தேன்.

பேசதுவங்கி, ஒரு வாக்கியத்தை முடித்ததுமே அவரிடம் ஒரு அமைதி ஏற்பட்டது. நான் அவரைப்பார்த்தேன். திடீரென அப்படியே சரிந்து விழுந்தார்.

உடனே அவரை நாங்கள் தாங்கிப்பிடித்தோம். அவரை நோக்கி டாக்டர் விரைந்தார். கலாமின் கண்கள் எங்களைநோக்கி நிலைகுத்தி நின்றன. அவரது தலையை ஒருகையில் நான் தாங்கிக்கொண்டு, அவரது கைகளை பற்றிக் கொண்டேன். அவரை பிழைக்கவைக்க என்னென்வோ செய்தோம். அவர் எந்த வலியையும் காட்டவில்லை.

அடுத்த 5 நிமிடத்தில் அருகில் இருந்த மருத்துவ மனையில் இருந்தோம். அதற்கடுத்த ஐந்தாவது நிமிடம், நமது நாட்டின் ஏவுகணை மனிதர், நம்மைவிட்டு போய்விட்டார் என்றார்கள்.

கடைசியாக அவரது பாதங்களைதொட்டு வணங்கினேன். பெரிய அறிஞர், எனது பழைய நண்பர். உன் நினைவுகள் என்றைக்கும் எனக்குள் இருக்கும். அடுத்தபிறவியில் சந்திப்போம் என நினைத்தேன்.

அவரை பற்றிய எண்ணங்கள் மீண்டும் மனதில் ஓடத்துவங்கின. அவருடன் பலமுறை உணவு அருந்தியது. பேசியது, பழகியது எல்லாமே நினைவில்வந்து மோதின. மனிதர் மறைந்துவிட்டார். ஆனால் அவர் விட்டுச்சென்ற பணி காத்திருக்கிறது. கலாம் வாழ்க! -உங்களுக்கு கடன்பட்ட மாணவர். இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குவைத் தீ விபத்து இந்தியர் உடல ...

குவைத்  தீ விபத்து இந்தியர் உடல்களுடன் சிறப்பு விமானம் கொச்சி வந்தடைந்தது சென்னை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர ப ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர பிரதானின் கருத்து மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக ...

குவைத் தீ விபத்து-மோடி ஆலோசனை

குவைத்  தீ விபத்து-மோடி ஆலோசனை குவைத் தீ விபத்து தொடர்பாக வெளியுறவுத் துறை இணை ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி அமைக்கும் பாஜக ஒடிஸா முதல்வராக பழங்குடியினத் தலைவா் மோகன்சரண் மாஜீ புதன்கிழமை ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்ட ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தின் முதல்வராக பெமாகாண்டு தொடா்ந்து 3-வது ...

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்க ...

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்கள் மோடி தலைமையிலான 3.o அமைச்சரவை பதவியேற்கும் நிலையில், இதில் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...