பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் (79) அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்டது. அதன்பின் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். இதையடுத்து அமரீந்தர் சிங் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக பொறுப்பேற்றார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமரீந்தர் சிங் பாஜகவில் சேர்வார் என தகவல்வெளியானது. இதை அவர் மறுத்தார். இந்த சூழ்நிலையில் அமரீந்தர் சிங் சார்பில் அவரது ஊடகஆலோசகர் ரவீன் துக்ரல் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பஞ்சாபின் எதிர்காலத்துக்கான போர்தொடங்குகிறது. பஞ்சாப் மற்றும் வாழ்வாதாரத்துக்காக சுமார் ஓராண்டாக போராடி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் நலனுக்காக சேவை செய்வதற்கு புதிய அரசியல்கட்சியை தொடங்குவது பற்றி விரைவில் அறிவிப்பேன்.

விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு மத்திய அரசு தீர்வுகண்டால், வரும் பஞ்சாப் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம். மேலும் அகாலி குழுக்கள் குறிப்பாக திண்ட்சா மற்றும் பிரம்மபுராபிரிவினர் உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...