புதிய அறிவிப்புகளுக்கான யோசனைகளை நாட்டுமக்களிடம் இருந்த பெற பிரதமர் முடிவு

 இந்தியாவின் சுதந்திரதினம் வருகிற 15–ந்தேதி (சனிக்கிழமை) நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

பிரதமர் உரையின் போது பொதுவாக நாட்டின் பல துறை வளர்ச்சிகள் பட்டியலிடப்படும். சில புதிய அறிவிப்புகளும் இடம் பெறும். இந்த புதிய அறிவிப்புகளுக்கான யோசனைகளை நாட்டுமக்களிடம் இருந்த பெற பிரதமர் முடிவுசெய்தார்.

இதையடுத்த பிரதமர் சுதந்திரத் தினத்தன்று என்னென்ன திட்ட அறிவிப்புகளை வெளியிடவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது பற்றி பிரதமர் அலுவலக இணையத் தளத்தில் கருத்து தெரிவிக்கலாம் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை பார்த்ததும் ஆயிரக் கணக்கானவர்கள் போட்டி போட்டு பிரதமருக்கு தங்கள் யோசனைகள், கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.

தினமும் 500 முதல் 600 பேர்வரை பிரதமரின் சுதந்திரதின பேச்சுக்கு யோசனைகள் அனுப்பி வருகிறார்கள். இது வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஓரிருநாட்கள் மட்டுமே மக்களின் யோசனை ஏற்கப்படும். அதன் பிறகு மக்களின் கருத்துக்கள் தொகுக்கப்படும். பெரும் பாலானவர்கள் தெரிவிக்கும் ஒருமித்த யோசனைகளை ஏற்றுக்கொள்ள பிரதமர் மோடி முடிவுசெய்துள்ளார்.

இதுவரை பிரதமருக்கு கருத்து தெரிவித்து ள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் தேசிய விருது வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். எனவே அப்துல்கலாமை கவுரப்படுத்தும் வகையில் பிரதமர் புதிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களில் சிலர் வட கிழக்கு மாநிலங்களில் பாராளுமன்ற கூட்டத்தைகூட்ட யோசனை தெரிவித்துள்ளனர். சிலர் நாட்டின் தலை நகரை ஆண்டுக்கு 2 மாதம் டெல்லியில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் ஏதாவது ஒருபகுதிக்கு மாற்றவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...