பதற்றம்கொள்ளும் அளவுக்கு பொதுத் துறை வங்கிகளின் நிலைமை இல்லை

 பொதுத்துறை வங்கிகளை சீரமைக்க ஏழு அம்ச திட்டத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். வங்கி தலைவர்களை நியமிப்பது, வங்கிவாரிய தலைமையிடம் நிதி, கடன் நெருக்கடியை குறைப்பது, அதிகாரம், செயல்பாடுகளைக் கணக்கிடுதல் மற்றும் சீர்திருத்தம் உள்ளிட்ட ஏழு அம்சத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மிஷன் இந்திரதனுஷ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் பொதுத் துறை வங்கிகளின் பங்கு இன்றி அமையாதது. கடந்த சில வருடங்களாகவே பொதுத்துறை வங்கிகள் பிரச்சினையில் இருக்கின்றன.

ஒவ்வொரு காலத்திலும் தேவையான உதவியை மத்தியஅரசு செய்துவருகிறது. பதற்றம்கொள்ளும் அளவுக்கு பொதுத் துறை வங்கிகளின் நிலைமை இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். 13 பொதுத் துறை வங்கி களுக்கு நடப்பு நிதி ஆண்டில் 20,058 கோடி ரூபாய் மூலதன முதலீடு செய்யப்படும். எஸ்பிஐ வங்கி அதிகபட்சமாக ரூ.5,511 கோடி, பேங்க் ஆப் இந்தியா ரூ.2,455கோடி, ஐடிபிஐ வங்கி ரூ.2,229 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.1,732 கோடி மற்றும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் ரூ.2,009 கோடி முதலீடு செய்யப்படும். தவிர வங்கி வாரிய தலைமை அமைக்கப்படும்.

ரிசர்வ்வங்கி கவர்னர் தலைமையில் இவை செயல்படும். வங்கித் தலைவர்களை நியமிப்பது, பொதுத்துறை வங்கிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணியை இந்தஅமைப்பு செய்யும் என்றார். 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த அமைப்பு செயல்பட தொடங்கும். 1969-ம் ஆண்டு வங்கிகள் பொதுவுடமை ஆக்கப்பட்டதற்கு பிறகு செய்யப்படும் மிகப் பெரிய சீர்திருத்தம் இது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். ஐந்து பொதுத் துறை வங்கிகளுக்கான தலைவர்களும் அறிவிக்கப்பட்டனர். நிதிச் சேவைகள் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா இதனை அறிவித்தார்.

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் தலை வராக மைக்ரோசாப்ட் இந்தியா வின் முன்னாள் தலைவர் ரவி வெங்கடேசன் நியமிக்கப் பட்டிருக்கிறார். இன்னும் ஆறு மாதத்தில் ஆறு பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஐந்து பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை தவிர இரண்டு பொதுத் துறை வங்கிகளுக்கு தலைமை செயல் அதிகாரிகளையும் மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. முதல்முறையாக தனியார் வங்கிகளில் பணிபுரிந்தவர்கள் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...