இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து செயல்பட வேண்டும்

 நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து செயல்பட வேண்டும் . நான் இதற்கு முன்பும் கூறி உள்ளேன். வறுமையை எதிர்த்துபோரிட வேண்டுமா, முஸ்லிம்களை எதிர்த்து போரிட வேண்டுமா என்பதை இந்துக்கள் முடிவுசெய்ய வேண்டும்.

இந்துக்களை எதிர்த்து போரிட வேண்டுமா, வறுமையை எதிர்த்துபோரிட வேண்டுமா என்பதை முஸ்லிம்கள் தீர்மானிக்க வேண்டும். இருதரப்பினரும் இணைந்து நின்று, வறுமையை எதிர்த்து போரிட வேண்டும்.

இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்து, வறுமைக்கு எதிராக போரிட்டால்தான், இந்த நாடு பலன் பெற முடியும். ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், சமாதானம் ஆகியவைதான் இந்த நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும்.

சில அரசியல்வாதிகள் அரசியல் லாபத்துக்காக பொறுப்பற்ற விதத்தில் பேசிவருகிறார்கள். அத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்களை, யார் பேசினாலும், ஏன், நரேந்திர மோடியே பேசினாலும்கூட, நீங்கள் அவற்றுக்கு செவி சாய்க்க வேண்டியதில்லை. அவற்றை காதுகொடுத்து கேட்காமல் புறக்கணித்து விடவேண்டும்.

நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்றால் அது நமது ஜனாதிபதி காட்டிய வழிகாட்டுதல்களைத் தான்.
புதன்கிழமை (நேற்று முன்தினம்) ஜனாதிபதி நமக்கு பாதையை காட்டி இருக்கிறார். 125 கோடி மக்களின் தலைவர் சொல்லி இருக்கிறார் என்றால் அதைவிட பெரியதாக ஒன்றை கூறிவிட முடியாது; வழிகாட்டி விட முடியாது; பெரிய உத்வேகத்தை தந்துவிட முடியாது.

ஜனாதிபதி காட்டிய பாதையை பின்பற்றுவோம். அப்போதுதான் உலகம் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிற வற்றை இந்தியா சந்திக்க முடியும். அரசியல் ஆதாயத்துக்காக பிரிவினைவழியில் செயல்படுவது முடிவுக்கு வர வேண்டும்.

"குஜராத் மாநிலத்தில் யாதவ சமூகத்தினர் செய்த வெண்மை புரட்சியின் காரணமாகவே அங்கு 'அமுல்' என்ற ஒரு மிகப் பெரிய நிறுவனம் உருவாவது சாத்தியமானது.

ஆனால், இங்கு பிஹாரில் லாலுபிரசாத் என்ன சாப்பிடுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. இந்துக்களும் மாட்டிறைச்சி புசிக்கின்றனர் என கருத்துகூறி, தன்னை அரசு அரியணையில் அமரவைத்த யாதவ சமூகத்தினரை இழிவு படுத்தியிருக்கிறார்.

சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லி விட்டு இப்போது அதை திரும்பப்பெறுவதாக கூறுகிறார். "நான் பசுக்களை வளர்க்கிறேன். அவற்றை வணங்குகிறேன். சாத்தான் உந்து சக்தியால் தவறுதலாக என் நாக்கு அக்கருத்தை பதிவு செய்தது" என்கிறார்.

இப்படியெல்லாம் பேசி லாலு தனதுகருத்தை மறைத்து விட முடியாது. சாத்தானுக்கு லாலு பிரசாத்தின் முகவரி எப்படி கிடைத்தது என தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன். இது வரை அரசியல் களத்தில் பல்வேறு தலைவர்களை எதிர்கொண்டிருக்கிறோம். இப்போதுதான் முதன்முறையாக எங்களை ஒரு சாத்தான் துரத்திக் கொண்டிருக்கிறது" என்றார் மோடி.

பீகாரில், நவாதா என்ற இடத்தில் பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தாத்ரி சம்பவம் பற்றி நேரடியாக கூறாமல், 'அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இருந்தால்தான் நாடு முன்னேறும்' என சுட்டிக் காட்டினார்.

டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசும்போது இந்த சம்பவத்தைப்பற்றி நேரடியாக குறிப்பிடாமல், நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.

அப்போது அவர், ''நமது கலாசாரத்தின் அடிப்படை கோட்பாடுகள்தான் நம்மை பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக இருக்க வைத்துள்ளன. பல்வேறு பண்டைய நாகரிகங்கள் அழிந்து போனாலும், நமது நாகரிகம் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கு நமது கலாசாரத்தின் அடிப்படை கோட்பாடுகள்தான் காரணம். நமது பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவை வீணாய்ப்போவதை நாம் அனுமதிக்க முடியாது. இதை நாம் உணர்ந்து செயல்பட்டால் நமது ஜனநாயகம் முன்னோக்கி பீடுநடை போடுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது'' என குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...