நீண்டகால ஆலோசனைக்கு பிறகு ரூ.15 ஆயிரம்கோடி மதிப்பிலான வெடிபொருள் தயாரிப்புதிட்டத்தை இந்திய ராணுவம் இறுதி செய்துள்ளது.
மத்தியகணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், “152 வகையான வெடிபொருட்களில் வெறும் 61 மட்டுமே கையிருப்பில் உள்ளன. பக்கத்து நாடுகளுடன் போர்மூண்டால் வெடிபொருட்கள் 10 நாட்களில் தீர்ந்து விடும்” என்று கூறப்பட்டிருந்தது.
நாட்டின் பாதுகாப்பு விதிமுறைப்படி ஒரு மாதத்துக்கான வெடிபொருட்கள் கையிருப்பில் இருக்க வேண்டும். ஆனால், இவற்றை இறக்குமதி செய்வது தொடர்பான நடைமுறைகளில் காலதாமதம் ஏற்படுவதே இதற்குக் காரணம் என தெரியவந்தது.
இதையடுத்து, இதுபோன்ற பொருட்களின் இறக்குமதியை படிப்படியாக குறைத்துக் கொண்டு, உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு முடிவுசெய்தது. இதன் அடிப்படையில், 10 வகையான வெடிபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய ராணுவத்துக்கு கடந்த ஆண்டு அதிகாரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நீண்ட ஆலோசனைக்குப்பிறகு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வெடிபொருட்களை தயாரிக்கும் திட்டத்தை ராணுவம் இறுதிசெய்துள்ளது. இந்த திட்டத்தின்படி 11 தனியார் நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். இதை ராணுவ தளபதியும், பாதுகாப்பு அமைச்சரும் கண்காணிப்பார்கள் என கூறப்படுகிறது.
இதன்படி, முதல்கட்டமாக பல்வேறு ராக்கெட்கள், வான் வழி பாதுகாப்பு சாதனங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், கையெறிகுண்டுகளை ஏவும் சாதனங்கள் ஆகியவற்றுக்கான வெடி பொருட்கள் தயாரிக்கப்படும்.-
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.