நாடி சுத்தி பயிற்சி

 தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள அசுத்தங்கள் சுத்தம் செய்யப்பட பின்னர் தான் பிராணாயாமமும், தியானமும் எளிதல் கைகூடும். நாடிகள் (நரம்புகள்) அசுத்தம் நிறைந்து இருக்குமானால், வாயுவானது நாடிகளில் நுழைவது கடினம்.

எனவே, பிராணாயாமம் பயில்வதற்கு முன்னர் நாடிகள் சுத்தப்படுத்தப் பட வேண்டும். நாடி சக்தி பிராணாயாமம் பயில்வதற்கு அடிப்படை ஆகும்.

நாடிகளை இரண்டு வழிகளில் சுத்தப்படுத்த முடியும். அவையாவன; சாமனு, நிர்மனு, சாமனு என்பது, பீஜ மந்திரத்தினால் மூளையைச் சுத்தப்படுத்துதல். நிர்மனு என்பது உடலை சுத்தப்படுத்துதல்.

ஒரு தியான நிலையிலோ, சுலபமான முறையிலோ அமர்ந்து முதுகெலும்பை நேராக நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இடது கை முழங்காலிலும், வலது கை மூக்கின் மேலும் இருக்க வேண்டும். கட்டை விரல் மூக்கின் வலது புறமும், நான்காவது ஐந்தாவது விரல்கள் இடது புறமும் இருக்க வேண்டும். சுட்டு விரலையும், நாடி விரலையும் மடக்கிக் கொள்ள வேண்டும். மூக்கை அழுத்தித் திருப்பாமல், எலும்புப் பகுதியை மட்டும் அழுத்திக் கொண்டு சுவாசத்தில் ஈடுபட வேண்டும்.

முதலில் இடது நாசி வழியாக மூச்சை வெளியிட்டு பின்னர் அதே நாசி வழியாக நீண்ட உள்மூச்சை இழுக்க வேண்டும். அப்போது வலது நாசி துவாரம் மூடப்பட்டிருக்க வேண்டும்.

பின்னர் இடது நாசியை மூடிக் கொண்டு வலது நாசித் துவாரம் வழியே மூச்சை வெளியிட வேண்டும். பின்னர் வலது நாசி வழியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பின்னர் நாசி வழியே மூச்சை வெளியிட வேண்டும். இது ஒரு தடவை என கணக்கிட வேண்டும்.

இந்த சுவாச முறையில் உள்மூச்சு வெளிமூச்சு இரண்டும் மிகவும் மெதுவாக நடக்க வேண்டும். சப்தம் எதுவும் உண்டாக்காமல் பயிற்சி செய்ய வேண்டும். உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. அதிகாலை அல்லது பின் மாலை நேரம் இதற்கு ஏற்ற காலமாகும்.

ஏனெனில், சூரியனிடமிருந்து வரும் அல்ட்ராவயலட் கதிர்கள் உடலில் உள்ள ஆஷ்துமா, ஜலதோஷம், இருமல் இவற்றை விரட்டுகிறது. வைட்டமின் ‘டி’ சூரியகதிர்களில் உள்ள அல்ட்ராவயலட் கதிரில் உள்ளது.

நுரையீரல், இதயம், வயிறு ஆகியவை சுத்தமடையும். நுரையீரலின் சுவாசிக்கும் தன்மை அதிகப்படும். சுவாசம் சீரடையும். தியானத்திற்கு முன் நாடிசுத்தி செய்வதால், தியானம் எளிதில் கைகூடும்.

நன்றி : பானுகுமார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...