பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் -பியூஷ் கோயல்

பெட்ரோலியம், வெடிபொருட்கள், பட்டாசு மற்றும் பிற தொடர்புடைய தொழில்துறை தலைவர்களிடமிருந்து கருத்துக்களைக் கோருவதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் புதுதில்லியில் நேற்று சம்பந்தப்பட்ட துறையினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் தொழில்துறையில் பொது  மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று  கோயல் கூறினார். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை (டிபிஐஐடி) மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது.

பெட்ரோலிய அமைப்பால் வழங்கப்படும் உரிமங்களுக்கான உரிமக் கட்டணத்தில் பெண் தொழில்முனைவோருக்கு 80 சதவீதமும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 50 சதவீதமும் சலுகை வழங்கப்படும் என்று கோயல் அறிவித்தார். 30-50 மீட்டருக்குள் மக்கள் வசிக்கும் இடங்களில் பெட்ரோல் நிலையங்களின் சில்லறை விற்பனை நிலையங்கள் செயல்பட அனுமதிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மாதிரியை உருவாக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (எம்ஓபிஎன்ஜி) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து வழிகாட்டுதல்களை வகுக்குமாறு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

வரைவு எரிவாயு சிலிண்டர் விதிகளில் சிலிண்டர்களுக்கான கியூஆர் குறியீடு சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இறுதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். வெடிபொருட்கள், போக்குவரத்து, உற்பத்திக்கு 10 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று உத்தரவிட்டார். வெடிபொருள் தவிர மற்ற அனைத்து உரிமங்களும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுவதால், ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் தன்மையை 10 ஆண்டுகளாக உயர்த்துவது குறித்து ஒரு குழு ஆய்வு செய்யும்.

செயல்முறைகளை மேலும் நெறிப்படுத்த, மூன்றாம் தரப்பு ஆய்வு முகமைகளை அதிக பகுதிகளில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

பியூஷ் கோயல், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்களை ஒழுங்குபடுத்துவதற்கான சிறந்த சர்வதேச நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியதுடன், பெட்ரோலிய வர்த்தக அமைப்பில் நடைமுறைகள் மற்றும் ஒப்புதல்களை எளிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். விண்ணப்பங்களை அனுமதிப்பதற்கான காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பெசோ அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஆலோசனையின் போது தொழில்துறை அளித்த ஆலோசனைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் வகையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில் சங்கங்கள் தாங்கள் அளித்த ஆலோசனைகளின் விவரங்களை உருவாக்க குழுக்களை அமைக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த குழுக்கள் சிறந்த நடைமுறைகள் மற்றும் தரங்களை ஆய்வு செய்து பரிந்துரைக்கும் பணியில் ஈடுபட்டன.

நாடு முழுவதிலுமிருந்து பெட்ரோலியம், வெடிபொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய தொழில்துறைகளின் பல்வேறு தொழில்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 150 க்கும் மேற்பட்ட பங்குதாரர்களை இந்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றிணைத்தது.

பெட்ரோலிய வர்த்தக அமைப்பின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், விசாரணைகளுக்கு விரைவான பதில்களை உறுதி செய்யவும், தடையில்லா சான்றிதழ்கள் மற்றும் உரிமங்களை சரியான நேரத்தில் வழங்கவும் பரிந்துரைகள் செய்யப்பட்டன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஜூலை 22 முதல் மத்திய பட்ஜெட் கூட் ...

ஜூலை 22 முதல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் -மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ  அறிவிப்பு மக்களவையில் வரும் ஜூலை 23-ம் தேதி மத்திய அரசின் ...

திறப்பு விழாக்களில் கலந்து கொள ...

திறப்பு விழாக்களில் கலந்து கொள்ள சம்பளம் தரவேண்டும் அந்த பணம் மக்களின் நல்ல காரியங்களுக்கு  செலவு  செய்வேன் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி என்னைப்போன்ற சக நடிகர்கள் திறப்புவிழாவுக்குச் செல்லும்போது எவ்வளவு தொகை ...

இருதரப்பு உறவை வலுப்படுத்துவத ...

இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை எதிர்நோக்குகிறோம்  ரஷ்ய செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் 'இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை ...

தி.மு.க.,அரசை அதிகாரத்தில் இருந் ...

தி.மு.க.,அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் -மத்திய அமைச்சர் சிவராஜ் சௌகான் தி.மு.க., அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற இளைஞர்கள் தீர்மானம் ...

அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூட்டு ...

அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூட்டுறவுத்துறைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்படும்-அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகரில், 102-வது சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி ...

கள்ளச்சாராயம் கேட்பதற்குகூட ந ...

கள்ளச்சாராயம் கேட்பதற்குகூட நாதியில்லை “முன் எப்போதும் இல்லாதளவுக்கு தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...