நாளை(பிப்.21) நடைபெறவுள்ள பாஜக மாநிலமாநாட்டில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.
தமிழக பாஜகவின் இளைஞரணி மாநிலமாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனி விமானம் மூலம் சேலம் வருகிறார்.
மத்திய அமைச்சரின் வருகையையொட்டி சேலத்தில் போலீஸ்பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. சட்டமன்றப் பேரவையின் கட்டிடவடிவில் பிரம்மாண்டமேடை அமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் முருகன், இளைஞரணி தலைவர் வினோஜ் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக சுமார் 60 ஏக்கர்பரப்பளவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 20 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை வரவேற்க மாநாடு திடலின் இருபுறமும் பிரமாண்டபேனர்கள் வைக்கப்பட்டுள்ளதோடு சாலையோரங்களில் கட்சி கொடிகளும் வைக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |