கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இ லையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி அமுங்கிவிடும் அல்லது பழுத்து உடையும்.

சிலவகைக் கட்டிகள் பழுத்து உடையாது. கட்டியாகக் கிளம்பி அப்படியே நின்றுவிடும். இப்படிப்பட்ட கட்டிகளை அமுங்கச் செய்யக் கருஞ்செம்பை இலையை சிற்றாமணக்கெண்ணெய்யில் வதக்கி, கட்டியின் மேல் வைத்துக் கட்டி வந்தால் மூன்றே நாட்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து, காயத்தைச் சுத்தம் செய்து விட்டு, காயத்தின் மேல் கனமாக வைத்துக் கட்டிவிட வேண்டும். மறுநாள் கட்டை அவிழ்த்து மருந்தை எடுத்துப் பார்க்க வண்டும். மருந்து தனியே வந்து விட்டால், அதை எடுத்து விட்டுப் புன்னைச் சுத்தம் செய்து, மறுபடி இலையை அரைத்துக் கட்ட வேண்டும். எடுக்க வரவில்லை யானால் அப்படியே விட்டு விட வேண்டும். புண் ஆறிய பின் இலை தனியே வந்து விடும். அது வரை ஈரம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சில பெண்மணிகளுக்கு மாதவிலக்கு ஒழுங்காக வெளியேறாது. இதனால் வயிற்று வழியும், சில தொந்தரவுகளும் உண்டாகும். இதை ஒழுங்கு படுத்தி மாதவிடாய் ஒழுங்காக வெளியேறக் கருஞ்செம்பை இலையை நைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, துணியில் வடிகட்டி, 8 தேக்கரண்டியளவு எடுத்து, காலை வேளையில் வெறும் வயிற்றில் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் மாதா மாதாம் மாதவிடாய் ஒழுங்காக வெளியேறும். பத்தியமில்லை.

ஒரு பெரிய இரும்புக் கரண்டியை எடுத்து அதில் இரண்டு சங்களவு நல்லெண்ணையை விட்டு 12 கருஞ்செம்பைப் பூவை போட்டு, கழற்சிக் காயளவு கஸ்தூரி மஞ்சளையும், அதே அளவு சாம்பிராணியையும் சேர்த்துக் கரண்டியை எரியும் அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்து, மருந்து சிவந்து வரும் சமயம் இறக்கி ஆறவைத்து, எண்ணையை மட்டும் இறுத்து தலையில் நன்றாகத் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் எப்போதும் போலத் தலை முழுகி வந்தால் நீடித்த தலைவலி, மண்டைக் குத்து இவைகள் பூரணமாகக் குணமாகும்.

சிரங்கு குணமாக கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்துக் காலையில் சிரங்கின் மேல் கனமாகத் தடவி மாலை வரை வைத்திருந்து, மாலையில் சுட்ட சிகைக்காய், மஞ்சள் வைத்து அரைத்த கலவையைப் போட்டுச் சுத்தம் செய்து, சாம்பல் ஒத்தடம் கொடுத்து தேங்காய் எண்ணெய் தடவி விட வேண்டும். இந்த விதமாக ஐந்து நாட்கள் செய்தால் போதும் சிரங்குகள் யாவும் மறைந்து விடும்.

இம்மரத்தின் பட்டையை சருகு போலக் காய வைத்து இடித்து சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை ஒரு டம்ளர் காய்ச்சிய பசுவின் பாலில் போட்டுக் கலக்கி, தேவையானால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கலக்கி கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக 40 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

தேள், பூரான், குழவி, வண்டு, சிறுபாம்பு, தேனீ மற்றும் சிறு விஷப்பூச்சிகள் கடித்து அதன் விஷம் காரணமாக உடலில் வலி, கடுப்பு, தடிப்பு மற்றும் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும், காணாக் கடி சம்பந்தமான விஷம் காரணமாக ஏற்படும் கோளாறு நீங்கவும் கருஞ்செம்பை வேரையும் விதையையும் சம அளவாக எடுத்துக் காய வைத்து, உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து மாச்சல்லடையில் சலித்து வாயகன்ற ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை சுண்டைக்காயளவு வெண்ணையில் இரண்டு சிட்டிகையளவு இந்தத் தூளைப் போட்டுக் கலக்கிக் கொடுத்து வந்தால் எந்த வகையான விஷமானாலும் அது முறியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...