பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் துணிச்சலான இராணுவ நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இருந்தது.
“ஆபரேஷன் சிந்தூர் உலகிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது” என்று அமித்ஷா கூறினார்.குறிப்பாக இந்திய இராணுவத்தையும் , இந்திய மக்களையும் மற்றும் எல்லைகளை அச்சுறுத்தும் எவரும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு.

பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடி:
உரியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு உடனடியாக ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் பதிலடி கொடுத்தோம். புல்வாமாவில் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. தற்பொழுது பயங்கரவாதிகள் பஹல்காமை குறிவைத்தபோது, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது. இதனால் 9 பயங்கரவாத மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் பாதுகாப்புக் துறையில் பல்வேறு மாற்றத்தை கொண்டு வந்தார். ஜம்மு காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தானால் கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். இதில் அப்பாவி மக்களை கொடூரமாக கொன்றனர். இதற்கு பிரதமர் மோடி பயங்கரவாதிகள் எங்கு மறைந்திருந்தாலும், இந்திய ராணுவம் அவர்களைக் கண்டுபிடித்து ஒழிப்போம் என்று கூறினார்.நரேந்திர மோடியின் அரசு 11 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது என்பதை பாகிஸ்தான் மறந்துவிட்டதாக அமித்ஷா கூறினார்.

மேலும் இதற்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்தது.முந்தைய அரசாங்கங்களின் கீழ், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பெரும்பாலும் பதிலளிக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டினார்.அதன் பிறகு பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா தனது உத்தியை மாற்றியுள்ளது.இப்போது எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் தீர்க்கமாக பதிலடி கொடுத்து வருகிறது. பிரதமர் மோடி தலையிலான ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

சிந்தூர் நடவடிக்கை:
காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அகற்றுவதற்கும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கும் ஆபரேஷன் சிந்தூர் வடிவமைக்கப்பட்டது என்று கூறினார். அதே நேரத்தில், சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான எச்சரிக்கை விடும் நடவடிக்கை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் “சத்தீஸ்கரில் CRPF,சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் BSF படைகள் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ள நக்சலைட்டு மையங்களை அழித்ததால், 31 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

இன்றுவரை, மேலும் 36 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் பலர் சரணடைந்துள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார். இந்தியாவில் இருந்து நக்சலிசத்தை ஒழிக்க உறுதியாக இருக்கிறோம் . மேலும் 2026 மார்ச் 31 ஆம் தேதிக்குள் பயங்கரவாதம் மற்றும் நக்சலைட்டுகளின் முடிவுக்குக் கொண்டுவருவதே எங்கள் இலக்கு என்று கூறினார்.

மறைந்த சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால், ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை கண்டு மகிழ்ந்திருப்பார். பிரதமர் மோடியின் தலைமையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பாலாசாகேப் தாக்கரே பெருமைப்பட்டிருப்பார். நமது நாட்டின் பாதுகாப்பைப் பாதுகாக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு அவர் தனது ஆசீர்வாதத்தை வழங்கியிருப்பார்” என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...