பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம்

இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் எல்லைக்குள் திங்கள்கிழமை இரவு ட்ரோன்கள் பறந்து வந்ததால் பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சியடைந்தனர்.

காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்குப் பின்னர் இந்தியா-நேபாளம் எல்லைப் பகுதிகள் முழுமையான கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில் பூர்னியா, மதுபானி மாவட்டங்களில் ட்ரோன்கள் ஊடுருவியதாக தெரிய வந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 29 ஆம் தேதி பீகார் வருகிறார். பாட்னாவில் அவர் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார். மேலும் பிக்ராம்கஞ்ச், ரோஹ்தாஸ் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் அவர் பங்கேற்கிறார்.

இந்திய-நேபாளம் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சாஸ்திர சீமா பால் (எஸ்எஸ்பி) படையினர் 15 முதல் 20 ட்ரோன்கள் நேபாளம் பகுதியில் இருந்து இந்திய வான்வெளியை நோக்கி வந்ததைப் பார்த்துள்ளனர். இந்த ட்ரோன்கள் பூர்னியா, மதுபானி மாவட்டங்களில் ஊடுருவியதாகவும் கண்டறியப்பட்டது. மேற்கு பகுதி வழியாக சென்ற ட்ரோன்கள் பின்னர் மீண்டும் நேபாள எல்லைக்குள் புகுந்து விட்டன. மதுபானி மாவட்டம் கமலா சோதனை சாவடி அருகேயும் சில ட்ரோன்கள் தென்பட்டதாக பாதுகாப்புப்படையினர் கூறுகின்றனர்.

மேலும் உள்ளூர் மக்களும் இந்த ட்ரோன் போன்ற பொருட்கள் பறந்து சென்றதை பார்த்து எங்களுக்கு தகவல் அளித்தனர். அதே போல மதுபானியில் நியமிக்கப்படுள்ள எஸ்எஸ்பியின் 48 ஆவது படைப் பிரிவின் டெபுடி கமாண்டண்ட் விவேக் ஓஜா, பல ட்ரோன்கள் போன்ற பொருட்கள் வடகிழக்கு பகுதியில் இருந்து ஊடுருவியதை உறுதி செய்துள்ளார்,”என்றார்.

இந்த நிலையில் ஈடிவி பாரத்திடம் பேசிய விவேக் ஓஜா, “ஜானகி நகர் எல்லையோர சோதனை சாவடி அருகே நேபாளம் எல்லைக்குள் ட்ரோன்கள் திரும்பி சென்றன. படையினர் பலர் இதனை கண்டுள்ளனர். இது குறித்து நேபாள பாதுகாப்பு படைகளிடம் கூறியிருக்கின்றோம். ஆனால், இது போன்ற பொருட்கள் ஏதும் பறக்கவில்லை என்று அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். இது குறித்து மேலும் விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றோம்,”என்றார்.

நேபாள எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் ட்ரோன்கள் பறந்து வந்தது குறித்து தலைமை அலுவலகத்துக்கு எஸ்எஸ்பி படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விமானப் படைக்கும், அந்தப் பகுதியில் உள்ள அனைத்து விமான தளங்களுக்கும் தகவல் சொல்லப்பட்டுள்ளது. பீகாரில் இந்திய-நேபாள எல்லையின் 729 கி.மீ பகுதிகள் உள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...