பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது நல்லது. சுருக்கமாகச் சொன்னால் சாப்பாட்டில் காரசாரம் இருக்கலாம், ஆனால் பேச்சில் காரசாரம் இருக்கக் கூடாது. நம்மில் நிறையப் பேர் செய்யும் மற்றெhரு தவறு, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொணடே சாப்பிடுவது. பல

நேரங்களில் என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாது. சில நேரங்களில் நம்முடைய தட்டில் உள்ளதைச் சாப்பிடுகிறோமா, அடுத்தவருடைய தட்டில் இருப்பதை எடுத்துச் சாப்பிடுகிறோமா என்பதும் தெரியாது. அந்த அளவுக்குத் தொலைக்காட்சியில் தங்களைத் தொலைத்து கொள்வோரும் உண்டு.

அதே நேரத்தில் ருசிக்காகச் சாப்பிடுகிறோமா, ருசித்துச் சாப்பிடுகிறோமா என்பதையும் நாம் சிந்திக்கலாம். ருசியால் கேடில்லை என்றால் சரி. ஆனால் அந்த ருசியால் கேடு ஏற்படும் என்றால் அத்தகைய உணவுப் பதார்த்தத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. ருசித்துச் சாப்பிடுவது என்பது, உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு உணவைக் கடித்து மென்று அனுபவித்துச் சாப்பிடுவது.

யாரொருவர் உடல் உழைப்பின்றிச் சாப்பிடுகிறாரோ
அவர் மற்றவர்களின் உணவைத் திருடியவர்

 

– அண்ணல் மகாத்மா காந்தியடிகள்

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்துமாறு உடலை வருத்தி உழைக்க பலருக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். குறைந்த பட்சம் தினமும் அவரவர்களால் இயன்ற வீட்டு வேலைகளைச் செய்த பின் சாப்பிட்டால், " உழைத்துச் சாப்பிட்டதாக" எடுத்துக் கொள்ளலாமே. அதற்கும் வாய்ப்பில்லை என்றால் உடற் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் முக்கியம்.

ஆகவே என்ன சாப்பிடுகிறோம் , எங்கு சாப்பிடுகிறோம் என்ற கேள்விகளுடன் எதற்காகச் சாப்பிடுகிறோம் என்பதையும் யோசித்து, பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால், உடல் நலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அது பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும், பசி வந்தால் பத்தும் பறக்கும், பசித்திரு தனித்திரு விழித்திரு

One response to “பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...