எவ்வளவு சேற்றைவரி இரைக்கிறீர்களோ அவ்வளவு தாமரைகள் மலரும்

 "பிஹாரின் முதல் 3 கட்ட வாக்குப் பதிவுகள் அமைதியான முறையில் நடைபெற்றன. இந்ததேர்தல் முடியும் தறுவாயில் மெகாகூட்டணி பொறுமையை இழக்கும்.

நிதிஷ் குமார், லாலு ஆகியோருக்கு கூறிக்கொள்கிறேன், எவ்வளவு சேற்றைவரி இரைக்கிறீர்களோ அவ்வளவு தாமரைகள் மலரும்.

நான் அன்னியன் என்கிறார் நிதிஷ்குமார். இந்தியாவின் வலுவான உறுப்பாகிய பிஹார் மக்கள் வாக்களித்து பிரதமராக்கி யுள்ளனர். நான் பாகிஸ்தான் பிரதமரா அல்லது வங்கதேச அல்லது இலங்கை பிரதமரா?

என்னை அன்னியன் என்று அழைப்பவர் சோனியாவை அன்னியர் என அழைப்பாரா? தாங்கள் வகித்தபொறுப்புக்கு நியாயம் வழங்க முடியாதவர்களே இத்தகைய அரசியல் விளை யாட்டுகளில் ஈடுபட்டு மக்களை திசைதிருப்புவார்கள்.

என்னை அவமதித்து அவமதித்து அவர்கள் களைத்து விட்டார்கள். தற்போது பிகார் மக்களை அவர்கள் அவமதிக் கிறார்கள். எனது கூட்டத்துக்கு வரும் மக்கள் அனைவரும் பணம் வாங்கிக்கொண்டு கூட்டத்துக்கு வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். இது பிகார்மக்களுக்கு அவமானம் அல்லவா? பிகார் மக்களை அவமதிப்பதாகாதா?

ஒரு இளைஞர் நம் கட்சிக்கு வாக்களிக்கிறார் என்றால், அந்தக்கட்சி நாட்டுக்கு என்ன செய்தது என்பதை அறிய அவருக்கு உரிமை உள்ளது.

காங்கிரஸ் பிஹாரை 35 ஆண்டுகள் ஆண்டது. லாலுஜி 15 ஆண்டுகள் ஆண்டார், நிதிஷ்குமார் 10 ஆண்டுகள் ஆடினார். மொத்தமாக 60 ஆண்டுகள் ஆண்டு ள்ளனர். இந்த 60 ஆண்டுகால தங்களது ஆட்சிக்கான நியாயத்தை அவர்கள் கோரமுடியுமா?

லாலுவின் ஜங்கிள்ராஜ் ஆட்சிக்கு முடிவுகட்டுவேன் என்று கூறியே நிதீஷ் குமார் வெற்றி பெற்றார். ஆனால், லாலுவின் வழியிலேயே நிதீஷ் குமாரும் ஆட்சிசெய்து வருகிறார்

நாங்கள் ஏழைமக்களுக்கான அரசை கட்டியெழுப்ப விரும்புகிறோம். ஏழைமக்களுக்கு கடன்கள் அளிக்க விரும்புகிறோம், இதனால் அவர்கள் வளர்ச்சிக்கு இந்தக்கடன் தொகையை பயன்படுத்திக் கொள்வர்."

லல்லு பிரசாத் யாதவின் சொந்த மாவட்டத்தில்  நடைபெற்ற பா.ஜ.க.வின் உச்சகட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது,

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...