கலாம் இல்லம் ஒதுக்கியதில் எந்த விதிமீறலும் இல்லை

 தில்லியில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் தங்கியிருந்த அரசு இல்லம், உரிய விதி முறைகளின் அடிப்படையிலேயே மத்திய இணையமைச்சர் மகேஷ்சர்மாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

 தில்லி ராஜாஜி சாலையில் உள்ள 10ம் எண் அரசு இல்லத்தை அப்துல்கலாம் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், அந்த வீடு மத்திய இணையமைச்சர் மகேஷ்சர்மாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க் கட்சிகள் விமர்சித்து வந்தன. மேலும், உயர்தர 8-ஆம் பிரிவின்கீழ் வரும் வீட்டை இணையமைச்சருக்கு ஒதுக்கீடு செய்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்பின.


 இந்நிலையில், இந்தவிவகாரம் குறித்து வெங்கய்ய நாயுடு அளித்த பேட்டி:

 1962-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அமைச்சர்களுக்கான குடியிருப்புகள் சட்டத்தின் விதிஎண் 3-இன் படி, மத்திய அமைச்சர்கள், இணைய மைச்சர்கள் ஆகியோருக்கு உயர்தர 8-ம் பிரிவு இல்லத்தை ஒதுக்கீடுசெய்ய முடியும்.

 முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கூட ஜோதிராதித்ய சிந்தியா, ராஜீவ்சுக்லா, சச்சின் பைலட் உள்ளிட்ட இணையமைச்சர்களுக்கு இந்தவகை வீடுகளே ஒதுக்கீடு செய்யப்பட்டன.

 ஆனால், எதிர்க் கட்சிகள் இப்போது ஏன் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்து கின்றன? வழக்கம் போல தவறான தகவல்கள், பிரசாரங்களின் மூலம் மக்களை திசை திருப்புவதற்கு எதிர்க் கட்சிகள் முயலுகின்றன.
 ஆனால், அந்தவீட்டை இந்தமாதம் 31-ஆம் தேதிக்குள் காலி செய்யவுள்ளதாக கலாமின் உதவியாளர் தெரிவித்துள்ளார் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...