காங்கிரஸ் கட்சியை பேச்சு வார்த்தை மூலம் சமாளித்து, சிக்கலில் இருக்கும் சரக்கு சேவை உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்களை நிறை வோற்றுவோம் என நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவைவரி மசோதா, ரியல் எஸ்டேட் மசோதா ஆகியவற்றை நிறை வேற்றும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக., முயன்று வருகிறது. மக்களவையில் பெரும் பான்மை இருந்தும் மாநிலங் களவையில் பெரும்பான்மை இல்லாததால் இந்தமசோதாக்கள் தற்போதும் நிறைவேற்றப் படாமல் இலுவையில் உள்ளது.
குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரி மசோதா விவகாரத்தில் ஆளும் பாஜக., காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களை சந்தித்து பேசிவருகிறது.
இந்நிலையில் பேச்சு வார்த்தை மூலம் காங்கிரஸ் கட்சியின் தடைகளை சமாளிக்கமுடியும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
”காங்கிரஸ் கட்சி எழுப்பிவரும் 3 முக்கிய மசோதாக்களின் பிரச்சனையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களை இணைங்க வைக்கமுடியும். அவர்கள் முன் வைக்கக்கூடிய சில கேள்விகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் பதிலளிக்க முடியும். அவர்கள் பிரச்சனைக் குள்ளாக்கும் மசோதாக்களை அனைத்து முன்னாள் நிதி மந்திரிகள் ப.சிதம்பரம் மற்றும் பிரணாப்முகர்ஜி ஆகியோரால் கொண்டு வரப்பட்டதுதான்.” என்றார்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.