நேரு வின் மரபில் வந்தவர்கள் என்ன மாதிரியான வரலாற்றை உருவாக்குகிறார்கள்

பாராளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் முடங்கியதைப்  போலவே, நடப்பு குளிர் கால கூட்டத் தொடரும் முடங்கும் அபாயம் உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்தார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சொத்து பரிவர்த்தனை தொடர்பாக நிதி முறைகேடு நடந்துள்ளது என்று பாஜகவின் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தவழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 19ம் தேதி அன்று அவர்கள் ஆஜராக வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதித் துறையை பயன்படுத்தி பிரதமர் மோடியும், மத்திய அரசும் அரசியல் பழி வாங்கப்பார்க்கிறது என்று சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் குற்றம் சாட்டினார்கள்.

இந்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரசை மோடி அரசியல் பழிவாங்குகிறார்  என்று காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜ்யசபாவை நடக்க விடாமல் முடக்கி வருகிறார்கள். இதனால் அவையில் எந்த வித நடவடிக் கைகளும்  நடக்கவில்லை.

இந்த நிலையில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பேஸ் புக்கில் கூறியிருப்பதாவது,

 பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் எந்த வித நடவடிக்கைகளும் நடக்காமல் முடங்கியது. அதேப் போன்று தற்போதைய குளிர் கால கூட்டத் தொடரும் முடங்கும் அபாயம் உள்ளது. பொது விவகாரங்களை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நாடு எதிர்நோக்கியுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) திருத்த மசோதாவை சட்டமாக இயற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இவை அனைத்தும் கால வரையின்றி தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் நாம் நியாயமாக நடந்துகொள்கிறோமா, நாட்டிற்கு நியாயமாக நடந்து கொள்கிறோமா என்று கேட்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 1967ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதியன்று ஜவகர் லால் நேரு முதல் லோக்சபாவின் கடைசி நாளில் உரை நிகழ்த்தினார். அதனை அனைவரும் படித்து பார்க்கவேண்டும். இந்திய நிர்வாகத்தை நிர்வகிக்கும் கடமை பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் நம் அனைவருக்கும் உள்ளது.என அவர் உரை நிகழ்த்தினார்.

 ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள். நேரு வின் மரபில் வந்தவர்கள் என கூறுபவர்கள் தாங்கள்,என்ன மாதிரியான வரலாற்றை உருவாக்குகிறோம் என்பது குறித்து கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும் இவ்வாறு அருண் ஜெட்லி பேஸ் புக்கில் காங்கிரஸ் உறுப்பினர்கள் செயல்பாட்டை விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...