கடந்த 6 ஆண்டுகளில் 9 மாணவர்கள் இறந்துள்ளனர், அப்போது கண்டுகொள்ளாத ராகுல் இப்போது கிளர்ந்து எழுவது ஏன் ?

சரக்கு, சேவைவரி தொடர்பான மசோதா வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பின்னர் ரூ.50 ஆயிரம் கோடிவரை நெடுஞ்சாலை, விவசாயம், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப் பட்டுள்ளது.

பயிர்பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ. 10 ஆயிரம் கோடிவரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. மோடி அரசு புதிய துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

பெட்ரோல், டீசல் வரிஉயர்வு மூலம் கிடைக்கும் நிதி பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு செயல்படுத்தப் படுகிறது. காங்கிரஸ் ஆட்சியைவிட பா.ஜ.க ஆட்சியில்தான் பெட்ரோல், டீசல்விலை குறைந்துள்ளது.

ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர் ரோஹித் தற்கொலை விவகாரத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் அரசியலாக் குகின்றன. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட கம்யூனிஸ்டு கட்சி தற்போது கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு புகுந்து பிரச்சாரம் செய்கிறது. தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று ரோஹித் கடிதம் எழுதிஉள்ள நிலையிலும் ராகுல் காந்தி தவறான பிரச்சாரம் செய்கிறார்.

2008–ம் ஆண்டுமுதல் 2014–ம் ஆண்டுவரை இதே பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்கள் இறந்துள்ளனர். அப்போது அங்குச்செல்லாத ராகுல்காந்தி இப்போதுமட்டும் சென்று உள்ளார். இது தரம் குறைந்த அரசியலை காட்டுகிறது.

இந்தியாவின் வளர்ச்சியும், பெருமையும் மற்ற நாடுகளைவிட அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் வருகிற சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பற்றி தேர்தல்நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவிர மற்ற கட்சிகள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள்தான். அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிக்கு மாற்றம்வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பா.ஜ.க.,வின் செல்வாக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகத்தில் அடுத்த சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியைபிடிக்கும்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுமண்டபத்தை நிறுவிய ஏக் நாத்ராணடே 1968–ம் ஆண்டு ஆந்திரமாநிலம் நெல்லூர் வந்தபோது மண்டபம் கட்ட நான் நிதி திரட்டிகொடுத்தேன். அந்த விவேகானந்தர் மண்டபத்தில் இன்று நான் நிற்பது என் வாழ் நாளில் பொன் நாளாகும். இங்கு தெய்வபுலவர் திருவள்ளுவருக்கு சிலை அமைந்துள்ளதும் பெருமைக்குரியதாகும்.

நாகர்கோவிலில் மத்திய பா.ஜ.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மத்திய மந்திரி வெங்கையாநாயுடு கலந்து கொண்டு பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...