கடந்த 6 ஆண்டுகளில் 9 மாணவர்கள் இறந்துள்ளனர், அப்போது கண்டுகொள்ளாத ராகுல் இப்போது கிளர்ந்து எழுவது ஏன் ?

சரக்கு, சேவைவரி தொடர்பான மசோதா வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பின்னர் ரூ.50 ஆயிரம் கோடிவரை நெடுஞ்சாலை, விவசாயம், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப் பட்டுள்ளது.

பயிர்பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ. 10 ஆயிரம் கோடிவரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. மோடி அரசு புதிய துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

பெட்ரோல், டீசல் வரிஉயர்வு மூலம் கிடைக்கும் நிதி பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு செயல்படுத்தப் படுகிறது. காங்கிரஸ் ஆட்சியைவிட பா.ஜ.க ஆட்சியில்தான் பெட்ரோல், டீசல்விலை குறைந்துள்ளது.

ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர் ரோஹித் தற்கொலை விவகாரத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் அரசியலாக் குகின்றன. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட கம்யூனிஸ்டு கட்சி தற்போது கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு புகுந்து பிரச்சாரம் செய்கிறது. தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று ரோஹித் கடிதம் எழுதிஉள்ள நிலையிலும் ராகுல் காந்தி தவறான பிரச்சாரம் செய்கிறார்.

2008–ம் ஆண்டுமுதல் 2014–ம் ஆண்டுவரை இதே பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்கள் இறந்துள்ளனர். அப்போது அங்குச்செல்லாத ராகுல்காந்தி இப்போதுமட்டும் சென்று உள்ளார். இது தரம் குறைந்த அரசியலை காட்டுகிறது.

இந்தியாவின் வளர்ச்சியும், பெருமையும் மற்ற நாடுகளைவிட அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் வருகிற சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பற்றி தேர்தல்நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவிர மற்ற கட்சிகள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள்தான். அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிக்கு மாற்றம்வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பா.ஜ.க.,வின் செல்வாக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகத்தில் அடுத்த சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியைபிடிக்கும்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுமண்டபத்தை நிறுவிய ஏக் நாத்ராணடே 1968–ம் ஆண்டு ஆந்திரமாநிலம் நெல்லூர் வந்தபோது மண்டபம் கட்ட நான் நிதி திரட்டிகொடுத்தேன். அந்த விவேகானந்தர் மண்டபத்தில் இன்று நான் நிற்பது என் வாழ் நாளில் பொன் நாளாகும். இங்கு தெய்வபுலவர் திருவள்ளுவருக்கு சிலை அமைந்துள்ளதும் பெருமைக்குரியதாகும்.

நாகர்கோவிலில் மத்திய பா.ஜ.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மத்திய மந்திரி வெங்கையாநாயுடு கலந்து கொண்டு பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...