36 ரபேல் ஜெட் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டது

பிரான்ஸிடமிருந்து 36 ரபேல் ஜெட் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டுள்ளது. டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டனர்.

இதனையடுத்து இருநாட்டுத் தலைவர்களும் கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் மோடி கூறும்போது, “பிரான்சிடமிருந்து 36 ரபேல் ஜெட் போர்விமானங்களை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இதுகுறித்த விலை விவகாரங்கள் இன்னமும் முடிவடையவில்லை, இதற்கும் உடனடி தீர்வு காணப்படும்” என்றார்.

பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே கூறும்போது, “இந்த ரபேல் ரக ஜெட் போர் விமானங்கள் தான் தற்போது சிரியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுத்த ப்பட்டுள்ளது. ஐஎஸ்-க்கு எதிராக இந்த ஜெட் போர் விமானங்களின் திறன் நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதனை இந்தியாவுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி யடைகிறோம்.

இந்த ஒப்பந்தம் இரண்டு விஷயங்களை பிரதிநிதித்துவம் செய்கிறது. பிரான்ஸ் தொழிற்துறையின் மீது இந்தியா கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் இந்தியாவுக்கு தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதில் பிரான்ஸின் நம்பிக்கை ஆகிய இரண்டும் முக்கியமானது. மேக் இன் இந்தியா திட்டத்தில் பிரான்ஸ் பங்கு பெற விரும்புகிறது” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...