67–வது குடியரசுதினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது

இந்தியாவின் 67–வது குடியரசுதினம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியகொடி ஏற்றி வைத்தார்.

இந்த ஆண்டு குடியரசுதின விழாவில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிராங் கோயிஸ் ஹாலண்டே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் ஒருவர்கலந்து கொள்வது இது 5–வது தடவை ஆகும். விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஹமீது அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ராணுவத்தில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் ‘அசோக சக்ரா’ விருதை ஜனாதிபதி வழங்கினார். மோகன்நாத் கோஸ்வாமிக்காக, அவரது மனைவி பாவ்னாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்கினார். (இந்திய ராணுவத்தின் சிறப்பு பாதுகாப்புப்படையில் பணியாற்றி வந்த மோகன்நாத் கோஸ்வாமி, கடந்த வருடம் 10 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்தார்.) இதனைத் தொடர்ந்து டெல்லி ராஜ பாதையில் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

இதுவரை நமது நாட்டின் குடியரசுதின விழா அணிவகுப்பில் அன்னிய படையினர் யாரும் பங்கேற்ற சரித்திரம் கிடையாது. இப்போது முதன் முதலாக இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் படையினர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.


முன்னதாக டெல்லியில் அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். முப்படை ராணுவ அதிகாரிகளும் அஞ்சலிசெலுத்தினர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...