மத்திய அமைச்சர்கள், தங்களது துறைசார்ந்த திட்ட பணிகளை குறித்த கால கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, ''அரசு அறிவிக்கும் திட்டங்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அதிகப் படுத்துகின்றன. மேலும், அந்த திட்டங்களின் பலன்கள் என்ன என்பதை பொது மக்கள் கண்காணித்து கொண்டே இருக்கின்றனர்.
பொது மக்களின் எதிர் பார்ப்புகளை பூர்த்திசெய்ய வேண்டுமென்றால் காலக்கெடுவை நாம் தவறவிடக்கூடாது. அதனால், எந்தவொரு திட்டத்தையும் குறித்த காலக் கெடுவுக்குள் முடிக்க வேண்டும். குறிப்பாக, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மிக முக்கியமானவை. அந்தத்திட்டங்களை எக்காரணம் கொண்டும் கிடப்பில் போட்டுவிடக்கூடாது" என்றார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.