எட்டு மாநில இடைத்தேர்தல் வெற்றி நிதானமான மோடி அலையையே காட்டுகிறது

சமீபத்தில் எட்டு மாநிலங்களில், 12 சட்டசபை தொகுதிகளுக்கு, நடந்த இடைத்தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் 7 தொகுதிகளில் வென்று காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட ஆளும் கட்சிகளை பின்னுக்கு தள்ளியுள்ளது.

மகாராஷ்டிரம்: மும்பை புறநகர் பகுதியில் உள்ள பல்ஹர் பேரவைத் தொகுதிக்கு  நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணிக் கட்சியான சிவசேனை தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 18,948 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளது .


மத்தியப் பிரதேசம்: சத்னா மாவட்டத்தில் உள்ள மைஹர்  தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மணீஷ் படேலைவிட அதிக வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் நாராயண் திரிபாதி வெற்றி பெற்றார்.


 உத்தரப் பிரதேசம்: முசாஃபர்நகர் தொகுதியில் பாஜகவும், சஹரன்பூர் மாவட்டம், தேவ்பந்த் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. ஃபைஸாபாத் மாவட்டம், பிகாபூர் தொகுதியில் ஆளும் சமாஜவாதி கட்சி வேட்பாளர் ஆனந்த் சேன்  யாதவ் வெற்றி பெற்றார்.


 பிகார்: மதுபனி மாவட்டம், ஹர்லகி பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி வெற்றி பெற்றது.

 

பஞ்சாப்: கதூர் சாஹிப் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான ஆளும் சிரோமணி அகாலி தளம் வெற்றி பெற்றது.

 

கர்நாடகாவில்  ஹெப்பால் தொகுதியில் பாஜக வேட்பாளர் நாராயணசாமி 19 ஆயிரத்து 149 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதேபோல தேவதுர்கா தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவன கவுடா நாயக் 16 ஆயிரத்து 871 வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.  பீதர் தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது.

 தெலங்கானா மாநிலம், நாராயண்கெட் தொகுதி இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும், திரிபுரா மாநிலம், பீர்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றன.

உ.பி.,யை பொறுத்த வரை  முஷாபர் நகர் தொகுதி கடந்த 2013ம் ஆண்டு மதக் கலவரத்தை அடுத்து நடைபெறும் முதல் தேர்தல், சமாஜ்வாதி வேட்பாளர் கவுர் தனது தந்தையின் மறைவை அனுதாப வாக்காக முயன்றார். மேற்கு பகுதியில் பலம் பொருந்திய சமாஜ்வாதி அமைச்சர் ஆசாம் கான் 30 சதவிதத்துக்கும் அதிகமான இஸ்லாமிய வாக்குகளை சிந்தாமல் கட்டுக்கொப்பாக ஒருங்கிணைத்தார்.  பணத்தை தண்ணீர் போல இறைத்தார் இத்தனையையும் தாண்டி இந்த தொகுதியில் பாஜக.,வின் வெற்றி 2017ம் ஆண்டு வரவிருக்கும் உ.பி.,சட்ட சபை தேர்தலுக்கான மைல்கல்லாகவே பார்க்கப் படுகிறது.

“நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் பெற்ற வெற்றி, மகிழ்ச்சி அளிக்கிறது”

பிரதமர் நரேந்திர மோடி

“எதிர்க்கட்சிகளின் மத்திய அரசுக்கு எதிரான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது”;-.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா
 

“முசபார் நகர் இடைத்தேர்தலில் பாஜக.,வின் வெற்றி முதல்வர் அகிலேஷ் யாதவின் தோல்வியாகும்”:-

பாஜக தேசிய செய்திதொடர்பாளர்  சந்திர மோகன்

 

பீஹாரிலும், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற 3 மாதத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் மகா கூட்டணியை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., வென்றுள்ளது.. லாலு, நிதீஷ், சோனியா கூட்டாக சேர்ந்ததால் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள். அப்படி கூட்டு சேர்ந்ததன் விளைவை மக்கள் உடனடியாக உணர தொடங்கிவிட்டதால்   மற்ற கட்சிகளையும்  மீறி பா.ஜ. வென்றுள்ளது..

கர்நாடகாவில் காங்கிரசியின் கோட்டையான ஹெப்பால் தொகுதியிலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் அதிகம் நிரம்பிய  தேவதுர்கா தொகுதியிலும் பாஜக வென்றதன் மூலம் கர்நாடகாவிலும் இழந்த செல்வாக்கை மீட்டுள்ளது.

இங்கே ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவரை ஓட்டுக்காக காணச் சென்ற ராகுலின் செயலை, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அப்சல் குருவுக்கு ஆதரவான தேச விரோதிகளின் கூட்டத்தின் உரிமை குரல்களை காக்க சென்ற ராகுலின் செயலை மக்கள் ஆதரிக்க வில்லை

மாறாக மோடி அலை ஓயவில்லை நிதானமாக வீசிக்கொண்டுதான் இருக்கிறது, மத்திய அரசின் தொலைநோக்கு பார்வைக்கொண்ட வளர்ச்சி திட்டங்கள் ஏற்கத்தக்கதே, பாராளுமன்றத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் போடும் முட்டுக்கட்டைகள் தேவையற்றது என்கிற ரீதியில் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று கூறலாம்.

நன்றி; தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...