பிரமாண பத்திரம் மாற்றியமைக்கப்பட்டதில் மன்மோகன் சிங், சோனியா காந்திக்கும் தொடர்பு ,

இஷ்ரத் ஜஹான் வழக்கு தொடர்பான பிரமாண பத்திரம் மாற்றியமைக்கப்பட்டதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது.

லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என தீர்க்கமாக தெரிந்து கொண்ட பிறகுதான், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோரை குஜராத் போலீஸார் சுட்டுக்கொன்றனர்.

 ஆனால், இச்சம்பவத்தில் அப்போதைய குஜராத்முதல்வர் நரேந்திர மோடியை சிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் பிரமாண பத்திரம் திருத்தப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

 அதுமட்டுமின்றி, இந்த நடவடிக்கையானது வெறும் துறைரீதியாக எடுக்கப்பட்ட முடிவல்ல  என்றும், அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவின்பேரிலேயே அந்தப் பிரமாணப் பத்திரம் திருத்தப்பட்டது எனவும் முன்னாள் உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.

 அப்படியெனில், இந்தவிவகாரத்தில் ப.சிதம்பரம் மட்டுமல்லாமல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும்.

 மேலும், இந்த பிரமாண பத்திரம் மாற்றியமைக்கும் நடவடிக்கையின் போது சிபிஐ அமைப்பால் தாம் துன்புறுத்தப்பட்டதாக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உள்துறை சார்புச்செயலராக இருந்த எஸ்.மணி தெரிவித்திருக்கிறார்.

 இந்த குற்றச்சாட்டை வெறுமனே மறுப்பதற்குப் பதிலாக, அது தொடர்பாக விளக்கமளிக்க காங்கிரஸ் கட்சி முன்வரவேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் அரசு தயாராக இருக்கிறது 

நன்றி ; வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...