''அடுத்த, 25 ஆண்டுகளுக்குள், நாட்டில் உள்ள பஞ்சாயத்து முதல், பார்லிமென்ட் வரை, அனைத்து இடங்களையும் பா.ஜ., பிடிக்கும்,'' என, சபதம் ஏற்கிறேன் . இதற்காக, தொண்டர்கள் உழைக்க வேண்டும் .
தேசப் பற்று நமதுகட்சியின் தனித்துவ அடையாளம். அதை நாம் மூன்று தலைமுறைகளாகக் கடைப்பிடித்து வருகிறோம். இப்போது இந்த அடையாளத்தை அடுத்த தலை முறைக்கும் அறிவுறுத்துவது நம் அனைவரின் கடமையாகும். 11 பேரால் தொடங்கப்பட்ட பாஜக, இப்போது 11 கோடி உறுப்பினர்களை கொண்ட நாட்டின் பேரியக்கமாக வளர்ந்துள்ளது.
நாட்டின் பிரதமராக ஜவாஹர்லால் நேரு பதவியேற்றபிறகு, அவர் தனது மேற்கத்திய கொள்கைகளையும் சிந்தனைகளையும் செயல்படுத்த முனைந்தார். அதை எதிர்க்கும்விதமாக தேசிய நலன்சார்ந்த சக்திகள் ஒன்று சேர்ந்து "ஜன சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கின. நேருவின் பாதையில் நமது முன்னோர்கள் சென்றிருந்தால் நம்நாடு தவறான பாதையில் வழி நடத்தப் பட்டிருக்கும். நல்ல வேளையாக அந்தத்தவறை நமது முன்னோர்கள் செய்யவில்லை.
நமக்கென ஓர் அடையாளத்தையும் பாதையையும் வகுத்துக்கொண்டு செயல்படுவதால் தான், உலகின் பல நாடுகளும், சாதாரண நிலையில் இருந்து மிகஉயரிய பதவிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை வியந்து பாராட்டுகின்றன. அந்தவகையில் உலகின் முன்னோடித் தலைவராக மோடி உருவாகியுள்ளார்.
பல காலமாக காங்கிரஸின் பிடியில் இருந்து வந்த ஆட்சியில் இருந்து மக்களை விடுவித்து ஏழ்மை, வறுமை பிணிகளை போக்க மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்துள்ளது. ஏழை, எளியமக்களின் நிலையை கவனத்தில்கொண்டு திட்டங்களை நிறைவேற்றும் அரசு மத்தியில் அமைந்துள்ளது. அதன் திட்டங்களையும் சிறப்புகளையும் மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டியது பாஜக தொண்டர்களின் கடமை'.
கட்சியின் நிறுவன நாள் விழாவில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியது
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.