மாற்றுத் திறனாளிகள் சான்றிதழை, நாடுமுழுவதும் பயன்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கை

மாநில அரசுகளால் வழங்கபடும் மாற்றுத் திறனாளிகள் சான்றிதழை, நாடுமுழுவதும் பயன்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய அளவிலான ஆலோசனைக்கூட்டத்தில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:


 தற்போதுள்ள சட்ட நடை முறையின்படி, ஒரு மாநில அரசால் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், மற்றொரு மாநிலத்தில் செல்லாது. இதனால், பணியிடமாற்றம், திருமணம் உள்ளிட்ட காரணங்களால் மாற்றுத் திறனாளிகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லநேர்ந்தால், அங்கு அரசின் சலுகைகளை தொடர்ந்துபெறுவதில் அவர்கள் சிரமங்களைச் சந்திக்க நேரிடுகிறது.


 இந்தப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், மாநில அரசுகளால் ஒருமுறை வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், நாடுமுழுவதும் அல்லது அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் செல்லத்தக்க வகையில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான 2014-ம் ஆண்டு சட்டத்தில் புதியபிரிவு விரைவில் சேர்க்கப்பட உள்ளது. இதற்கான சட்ட முன்வரைவு பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


 மாற்றுத் திறனாளிகளின் பெயர், முகவரி, அலைபேசி எண், வங்கிக்கணக்கு விவரம், உடலுறுப்பு பாதிப்பின் வகை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நவீன அடையாள அட்டை வழங்கும்திட்டம், மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லாம் மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்பு, மாற்றுத்திறனாளிகள் குறித்த அனைத்து விவரங்களையும் நாம் இணையம்வழியாகவே தெரிந்து கொள்ளலாம் என்று அமைச்சர் கெலாட் தெரிவித்தார்.
 இந்த கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப்பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான சட்ட  விதிமுறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...